Saturday, July 7, 2012

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றுபட்டு செயற்பட மூன்று முஸ்லிம் கட்சிகள் இணக்கம்!

Saturday, July 07, 2012
இலங்கை::கிழக்கு மாகாண சபை தேர்தலில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்று பட்டு செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.

நேற்று (வெள்ளிக்கிழமை 06.07.2012) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடை பெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்லின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கொழும்பு தாறுல் ஈமான் கட்டிடத்தில் முஸ்லிம் கட்சிகளை ஒன்றினைக்கும் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க றிஸ்வி முப்தி, அதன் செயலாளர் முபாறக் மதனி பொருளாளர் கலீல் மௌலவி கொழும்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் அஸிஸ் மிஸ்பாஹி ஆகிய உலமாக்கள் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அன் தவிசாளரும் பிரதி யமைச்சருமான பசீர் சேகுதாவூத், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்லம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அதன் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், சட்டத்தரணி சஹீட் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இக் கூட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சிகளும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஒன்று பட்டு செயற்படுவதுடன் சமூகத்தின் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு செயற்படுவதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை தேர்தல் காலமும் புனித றம்ழான் நோன்பு காலமும் ஒன்றாக வருவதனால் யாரையும் யாரும் வமர்சிக்காமல் நடந்து கொள்வது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் மற்றும் தேசிய காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அதாவுல்லா ஆகியோர் கலந்து கொள்ளாவிடினும் இங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று நடாத்துவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment