Tuesday, July 10, 2012

இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Tuesday, July 10, 2012
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கடந்த 2 ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பிடிபட்ட 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று 9ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து சேருவார்கள்.

No comments:

Post a Comment