Tuesday, May, 01, 2012இலங்கை::பெங்கோக்கில் இருந்து இலங்கை நோக்கி வந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் குடிபோதையில் கலகம் ஏற்படுத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் மாலைத்தீவு பிரஜைகள் என தெரியவந்துள்ளது.
பெங்கோக்கில் இருந்து நேற்று 30ம் திகதி காலை 9 மணிக்கு இலங்கை நோக்கி வந்த விமானத்தில் இவர்கள் இவ்வாறு கலகம் ஏற்படுத்தியுள்ளதோடு நேற்று இரவு 11 மணிக்கு விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்த பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, துபாயில் இருந்து வந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் மது போதையில் கலகம் ஏற்படுத்திய இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment