Wednesday, May 30, 2012

போதைப் பொருள் கடத்திய ஈரான் பிரஜைகள் கைது!

Wednesday,May,30,2012
இலங்கை::துபாயில் இருந்து விமானம் மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஈரான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குறித்த ஈரான் பிரஜைகளை சந்தேகத்தின்பேரில் சோதனைக்கு உட்படுத்தியபோது மெத்த எம்பிட்டமின் எனப்படும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இவர்களில் ஒருவரது பயணப் பொதியில் இரண்டு கிலோகிராமிற்கும் மேற்பட்ட போதைப் பொருள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment