Wednesday,May,02,2012இலங்கை::அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியகழ்வு அமைச்சர் கிறிஸ் போவன் இன்றைய தினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே, அவரின் இந்த விஜயத்தின் நோக்கமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
கிறிஸ் போவன் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment