Thursday, May 31, 2012

புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் நாளை இலங்கை வருகை!

Thursday,May,31,2012
பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு இன்று திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள் நாளை நாட்டை வந்தடைவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களை ஏற்றிய விமானம் நாளை காலை ஏழு மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அரசியல் புகலிடம்கோரி பிரித்தானியாவுக்குச் சென்ற குறித்த இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ச்சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்களை தேசிய இரகசிய தகவல் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment