Saturday, April 28, 2012

இலங்கை தூதரகம் முற்றுகை மமக போராட்டத்தில் மதிமுக பங்கேற்பு : (புலி ஆதரவு கோமாளி) வைகோ அறிவிப்பு!

Saturday, April, 28, 2012
சென்னை::மதிமுக பொதுச் செயலாளர் (புலி ஆதரவு கோமாளி) வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புலா என்ற இடத்தில் உள்ள மசூதியை கடந்த 20,ம் தேதி 2 ஆயிரத்துக்கும் அதிகமான புத்த பிட்சுகள் முற்றுகையிட்டுள்ளனர். கடப்பாரை, சம்மட்டிகளால் மசூதியை உடைத்து நாசம் செய்துள்ளனர்.இதை கண்டித்து வரும் 30,ம் தேதி மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனித நேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும். பிற்பகல் 3 மணிக்கு மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் இருந்து புறப்பட்டு செல்லும் அறப்போராட்ட குழுவில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், அமைப்பு செயலாளர் சீமா பஷீர் உள்ளிட்ட மதிமுகவினர் பெருந்திரளாக பங்கேற்பர்.

No comments:

Post a Comment