Tuesday, April 24, 2012

மொஹான் பீரிஸ் சாட்சியாளராக அழைக்கப்படுவது குறித்து 17 ஆம் திகதி தீர்மானம்!

Tuesday, April, 24, 2012
இலங்கை::ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சாட்சியாளராக அழைக்கப்படுவது குறித்து அடுத்த மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

சரத் டீ.ஆப்ரூ மற்றும் எச்.என்.ஜே.பெரேரா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஹோமாகம நீதவான் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கிறிஸ்மான் வர்ணகுலசூரிய நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடைபெற்றது.

எனினும் சட்ட மா அதிபர் ஜெனிவாவில் அவரின் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அல்லாது வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே உரையாற்றியுள்ளார் என்பதால் அவரை அழைப்பதில் பயனில்லை என்று பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவீந்ர பெர்ணான்டோ இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மனு எதிர்வரும் மே மாதம் 31 ஆம்திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக அமெரிக்க மற்றும் ஜேர்மன் தூதரகங்களின் உத்தியோகத்தர்கள் இருவரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment