Thursday,March,29,2012இலங்கை::பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருகிலோகிராமுக்கும் மேற்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை அடுத்த மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment