Friday, March 30, 2012

மேர்வின் சில்வாவின் கருத்துத் தொடர்பில் வினவத் தீர்மானம்!

Friday, March,30, 2012
இலங்கை::தனக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ள கருத்துத் தொடர்பில், கருத்துக்களை வினவுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு கூடிய கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பூஜாபிடிய பிரதேசசபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment