Saturday, March 31, 2012

அமெரிக்காவின் மூன்று பிரபல கடனட்டை நிறுவனங்கள் பாதுகாப்பு தரவுகளின் கசிவு குறித்து எச்சரிக்கை

Saturday, March, 31, 2012
வாஷிங்டன்::அமெரிக்காவின் மூன்று பிரபல கடனட்டை நிறுவனங்கள் பாதுகாப்பு தரவுகளின் கசிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

கசிவு காரணமாக கடனட்டை வைத்திருப்போரின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக குறித்த நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

தமது கட்டமைப்புக்குள் எந்தவித அத்துமீறலும் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள குறித்த நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளன.

இவ்வாறான தரவுகள் நியூயோர்க்கில் வைத்து திருட்டுத் தனமான முறையில் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தகவல் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு நிறுவனமும் இதுவரை அறிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகாளாவிய ரீதியில் கடனட்டை மூலம் கொடுப்பனவுகளை செய்யும் நிறுவனமொன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த நிறுவனத்தின் பங்குகள் 9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment