Thursday,March,29,2012இலங்கை::மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினர் குறித்த இளைஞனை நேற்றிரவு 10 மணியளவில் கடத்திச் சென்றுள்ளனர்.
வாகரை திருமலை வீதி பால்சேனை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment