Monday, February 6, 2012

பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை!

Monday, February 06, 2012
லண்டன்::பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என கூறி விடுவிக்கப்படடுள்ளார்.

கோகுலவதனி மயுரன் என்ற 31 வயதுடைய இலங்கை பெண், கடந்த ஜனவரி 31ம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விசாரணையின் பின்னர் சந்தேகத்தின் பேரில் காவற்துறையினர் பிரித்தானியர் ஒருவரை கைது செய்தனர்.

எனினும் அவருக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என கூறி, அவர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து காணாமல் போனவர் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment