Tuesday, February 28, 2012

இந்தியா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் - மஹிந்த சமரசிங்க!

Tuesday, February 28, 2012
ஜெனீவா::இந்தியா இலங்கைக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என அமைச்சர்மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்பூரணமாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கம் மற்றும்நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தெளிவுபடுத்தியதாகத்தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றுவதா அல்லது கைவிடுவதா என்பதனை சம்பந்தப்பட்டத்தரப்பினரே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment