Wednesday, February 29, 2012

பிரித்தானியாவிலிருந்து வந்த இலங்கைப் பெண் சடலமாக மீட்பு!

Wednesday,February,29,2012
இலங்கை::கொள்ளுப்பிட்டி பகுதி ஹோட்டல் ஒன்றின் அறையிலிருந்து கத்திக்குத்து காயங்களுடன் பெண்ணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கைப் பெண் ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment