Tuesday, February 28, 2012

மகஸீன் சிறைச்சாலை வன்முறை; 46 பேருக்கு விளக்கமறியல்!

Tuesday, February 28, 2012
இலங்கை::சிறைச்சாலையில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 46 சிறைக்கைதிகளை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 59 சிறைக்கைதிகளில் 46 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 13 பேரை கைதுசெய்ய வேண்டியுள்ளதாகவும் வழக்கு விசாரணையின்போது மேலதிக நீதவான் பிரகார்ஷ ரணசிங்கவிடம், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறினர்.

சேதமடைந்த சொத்து மற்றும் உபகரணங்களின் பெறுமதி 4,700,000 ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் உண்மையான சேதவிபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment