Tuesday, February 28, 2012இராமேசுவரம்::நேற்று முன்தினம் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் மற்றும் மேலும் 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 17 பேர் உள்பட 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.
சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களும் இலங்கை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தீவிர விசாரணைக்குப்பின் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஜீவராணி கருப்பையா தீர்ப்பளித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 22 பேரும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment