Saturday, February 4, 2012

2015 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமானங்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கவுள்ளது!

Saturday, February 04, 2012
இலங்கை::2015 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமானங்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கவுள்ளது. இந்த விமானங்களை இயக்குவதற்கு அனுபவமும், திறமையுமிக்க விமான ஓட்டிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆளணியில் சேர்த்துக் கொள்ளும் பணியை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இப்பிராந்தியத்தில் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோளாகும். சமீபத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் கெடெட் பைலட்மார் குழுவொன்றை தெரிவு செய்து அவர்களுக்கு விமானம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது.

இவர்கள் இப்போது கனிஷ்ட முதல் உத்தியோகத்தர்களாக விமானங்களில் பணிபுரிவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உலகளாவிய அமைப்பின் கிளை நிறுவனம் என்ற முறையில் விமானம் ஓட்டுவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளன.

தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இது போன்ற 267 கனிஷ்ட முதல் உத்தியோகத்தர்கள் விமான ஓட்டி உதவியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். காலப்போக்கில் இவர்கள் விமானங்களை தானாகவே ஓட்டிச் செல்லும் பயிற்சியையும், அனுபவத்தையும் பெறுவார்கள்.

No comments:

Post a Comment