Saturday, January 28, 2012இலங்கை::பகல் வேளைகளில் வீடுடைப்பில் ஈபட்டு 20 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்காபரணங்களை திருடிய ஒருவரை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் 21 வயதுடைய பதுளையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இன்றைய தினம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை, மஹியங்கனை, பதுளை உட்பட சில பிரதேசங்களில் வீடுகளை உடைத்து இந்த நபர் தங்காபரணங்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment