Friday, December,30, 2011இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிக்கல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரின் எற்பாட்டில் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டதுடன் இலவச வைத்திய சேவையும் நேற்று நடைபெற்றது.
தொப்பிகல 232 ஆம் பிரிவின் இராணுவ தலைமையகப் பொறுப்பதிகாரி கேர்ணல் செனவடுகே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேஜனர் கலன் சூரிய உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இவர்களுக்கான இலவச வைத்திய சிகிச்சை முகாமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment