Saturday, December 31, 2011

வதந்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்தி நாட்டுக்கு அபகீர்த்தி செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday,December,31,2011
இலங்கை::சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண் டுவரப்பட்ட இறந்தவரின் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்த அவரது 11 உறவினர்கள் பத்து நாட்களாக காணாமல் போயிருக்கிறார்கள் என்ற செய்தியை டிசம்பர் மாதம் 29ம் திகதி உதயன் பத்திரிகையின் முன்பக் கத்தில் பார்த்த பின்னர் அதுபற்றி தாம் விசாரணை களை மேற்கொண்ட போது இது ஒரு தவறான செய்தி என்பதை தெரிந்து கொண்டதாக பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி, அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினகரனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இது போன்ற செய்திகளை சில விஷமிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் போர்வையில் பரப்பி நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை உண்டுபண்ண எத்தனிக்கிறார்கள் என்றும் அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், சில அரசியல் சக்திகள் அரசியல் இலாபம் திரட்டுவதற்காக மக்க ளிடையே இதுபோன்ற போலியான வதந்திகளை கிளப்பி, மக்களை அச்சுறுத்துவதற்கும் எத்தனிக்கிறார்கள்.

அரசியலில் செல்லாக்காசாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சக்திகள் குட்டையை கிளப்பிவிட்டு, வேடிக் கைப் பார்த்து சுயலாபம் தேடுவதற்கும் முயற்சி செய்கின்றனர். கடந்த காலத்திலும் இந்த சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்கள் மூலம் சுயவியாபாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் பணம் திரட்டுவதற்கும் எத்தனித்த எத்தனையோ நிகழ்வுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழ் மக்கள் இத்தகைய பொய் பிரசாரங்களை நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் போன்றவை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற தப்பபிப்பிராயத்தை வெளிநாடுகளில் பரப்புவதன் மூலமும் சுய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பொய் காரணங்களை காட்டி, வெளிநாடு செல்ல எத்தனிப்பவர்களுக்கு உதவும் முகமாகவே இத்தகைய போலி செய்திகளும், வதந்திகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரப்பப்படுகின்றன.

11 பேர் காணாமல் போன செய்தி கிடைத்தவுடன் விசாரணைகளை செய்து உண்மையை வெளிப்படுத்துவேன் என்ற அச்சத்தில், இந்த போலி செய்தியை வெளியிட்டவர்கள் இப்போது மெளனமாகியிருக்கிறார்கள்.

ஒரு தவறான செய்தியை வெளியிட்ட இப்பத்திரிகை அதனை திருத்தி உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிப்பது நல்லது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் மீண்டும் சமாதானமும் அமைதியும் திரும்பிக் கொண்டிருப்பதனால் இன்று நாடு பொருளாதாரத்துறையில் அதிவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. இப்போது எவ்வித அச்சுறுத்தலுமின்றி தமிழ் மக்கள் குறிப்பாக வடபகுதி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

இலங்கையில் மீண்டும் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டிருக்கிறது. என்ற நற்செய்தியை வெளிநாட்டு அரசாங்கங்கள் தெரிந்து கொண்டால் அந்நாடுகள் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நட்டுக்கோ திருப்பி அனுப்பிவிடும் என்ற அச்சத்தினால் அவர்களை ஆதரிக்கும் சில சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு அரசாங்கங்களை நம்ப வைப்பதற்காகவே இத்தகைய போலி பிரசாரங்களும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்விதம் நாட்டுப்பற்றற்ற முறையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய தேசத்துரோக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment