Saturday, December 31, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை: நிரந்தர சமாதானத்துக்கு சிறந்த ஆவணம்-அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ரெல்மோ லங்கியூலர்!

Saturday,December,31,2011
இலங்கை:இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தையும், நிலை யான சமாதானத்தையும் ஏற்படுத்துவ தற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக் கையானது அரசாங்கத்துக்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ரெல்மோ லங்கியூலர் தெரிவித்துள் ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்றிருக்கும் அவர், நாட்டில் சமாதா னத்தையும், நல்லி ணக்கத்தையும் ஏற்படுத் துவதற்கு அரசா ங்கம் எடுத்திருக்கும் நட வடிக்கைகளையும் வரவேற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை சமூகத்தவர்களின் அழைப்பையேற்று தனிப்பட்ட விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்திருந்த ரெல்மோ லங்கியூலர் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு கூறினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பல்வேறு விடயங்களை ஆராய்ந்திருப்ப தாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அக்கறையுடன் இருப்பதாகவும் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த அறிக்கையானது சகல தரப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டால் சட்டரீதியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம். மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது என்ற செய்தியையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கைக்கும், வெளிநாட்டுக்கும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் அவுஸ்ரேலியா உன்னிப்பாக அவதானிக்கும் அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்ரேலியா தொடர்ந்தும் தயாராகவுள்ளது.

இலங்கை விஜயத்தின்போது நான் யாழ்ப்பாணம், காலி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்தேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படு கின்றன. அங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதே நடைமுறையான நல்லிணக்கமாக அமையும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதைக் காணக்கூடியதாகவிருந்தது.

அதேநேரம், யாழ் குடாநாட்டிலுள்ள இராணுவத்தினரின் பிரசன்னங்களைக் குறைப்பதற்கே விரும்புவதாக யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் என்னிடம் கூறினார். அங்குள்ள இராணுவ அதிகாரிகள் உட்பட கீழ்மட்ட இராணுவத்தினருடன் கலந்துரையாடியதில் அனைத்துப் பொறுப்புக்களையும் யாழ் குடாநாட்டு மக்களிடம் கையளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவதற்கே விரும்புவதாகக் கூறுகின்றனர்.

யாழ் குடாநாட்டிலுள்ள வீடற்றவர்களுக்கு இராணுவத்தினர் வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். இதனையிட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அத்துடன், யாழ் குடாநாட்டிலுள்ள மீனவர் கிராமம் ஒன்றுக்கு அவுஸ்ரேலியா நிதியுதவி வழங்கியுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் உதவி வழங்குவதற்கும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் அவுஸ்ரேலியா தயாராகவே உள்ளது. இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பில் சக அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

No comments:

Post a Comment