Saturday, December 31, 2011

வடமராட்சியின் கரவெட்டி துன்னாலை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் சிக்கி இருவர் காயம்!

Saturday,December,31,2011
இலங்கை::வடமராட்சியின் கரவெட்டி துன்னாலை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் சிக்கி இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீதியோரமாக கண்டெடுத்த பொதியொன்றினை உடைத்துப்பார்க்க முற்பட்ட வேளையிலேயே அது வெடித்ததாக கூறப்படுகின்றது. இவ்வெடிப்பு சம்பவத்தினில் அதே இடத்தை சேர்ந்த இராசகுலசிங்கம் தங்கமலர் (வயது 33) மற்றும் மகன் முறையான தவராசசிங்கம் சசிகரன் (வயது 9) ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். முன்னதாக இவர்கள் இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment