Wednesday, November 30, 2011

வடக்கு, கிழக்கில் அனைவரும் சுதந்திரமாக நடமாட வழியேற்படுத்தியவர் ஜனாதிபதி-விநாயகமூர்த்தி முரளிதரன்!

Wednesday, November 30, 2011
ஒரு வரவு - செலவுத் திட்டம் சமர்ப் பிக்கப்படுகின்ற பொழுது, அது எங்களுடைய நாட்டின் இறைமைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களுடைய விஸ்தீரணத்துக்கும் ஏற்ப அமைய வேண்டும் என்பதுதான் நியதி. அதனைவிடுத்து, இது அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்படுகின்ற வரவு-செலவுத் திட்டத் தைப்போல் அல்லது பிரித்தானியாவில் சமர்ப் பிக்கின்ற வரவு - செலவுத் திட்டத்தைப் போல் இருக்க வேண்டும் என்று கூறுவது யதார்த்தத்துக்குப் பொருத்த மற்ற விடயமாகத்தான் இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இவ்வரவு - செலவுத் திட்டமானது, எங்களுடைய மக்களின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் பொருளா தாரத்தையும் அபிவிருத்தி செய்கின்ற நோக்கோடு, திட்டமிட்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. பல அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு வரவு - செலவுத் திட்டமாக நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். உதாரணமாகக் கல்வி, முதியோர்களுக்கான நலன்புரி, அரச ஊழியர்களுக்கான 10 சதவீத வேதன அதி கரிப்பு போன்ற பல விடயங்கள் உள்ளடக் கப்பட்டிருக்கின்றன. அது மாத்திரமல்ல, இன்று உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக் கில் பல நன்மையான விடயங்களை உள்ளடக்கியுள்ளதோடு, பல வரி விலக்கு களையும் கொண்டுள்ளது. ஆகவே, நாங்கள் இந்த இடத்தில் ஒன்றைக் கூற வேண்டும். அதாவது, குழந்தைகளின் போசாக்கினை மேம்படுத்துவதற்காக சத்துள்ள உணவுகளின் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில், எங்களுடைய குழந்தைகளின் போசாக்கு மட்டத்தினைக் கருத்தில் கொண்டு மீண்டும் ‘திரிபோஷா’ திட்டத்தினை அமுல் படுத்தியி ருப்பது ஜனாதிபதி அவர்களின் அதிக கரிசனையை எடுத்துக் காட்டுகின்றது. இங்கு எதிர்க் கட்சியினர் உரையாற்றும் பொழுது,

ஜனாதிபதி அவர்களை சில ஆலோசகர்கள் தவறாக வழிநடத்துவதாகக் கூறினார்கள். இதனை ஏற்றக்கொள்ள முடியாது! ஏனென்றால் கிட்டத்தட்ட 42 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவங்களைக்கொண்ட ஒருவர் தான் எங்களுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்!

எனவே அவருக்கு எவரும் ஆலோசனை வழங்க வேண்டிய தேவை இருக்குமென நான் நினைக்கவில்லை.

ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் பொழுது, வடமாகாணத்தில் 23 சதவீதப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அதனை இன்று எதிர்க் கட்சியினர் ஏளனம் செய்தார்கள்.

இதனை விளக்கமற்ற ஒரு செயலாகத்தான் நான் பார்க்கின்றேன். ஏனென்றால் 30 வருட காலமாக எதுவித உற்பத்தியும் அற்ற நிலை யிலிருந்த பிரதேசம் தற்பொழுது 23 வீத பொரு ளாதார வளர்ச்சியினைக் கண்டிக்கிருகின்றது. இதனைத்தான் அவர் அன்று தெளிவாக எடுத்துக்கூறினாரே ஒழிய, ஒட்டுமொத்த இலங்கையினையினும் உள்ளடக்கிக் கூற வில்லை. ஆகவே, 30 வருடங்களாக எதுவித உற்பத்திகளோ, வளர்ச்சியோ, வருமானமோ அற்றிருந்த வடக்குக், கிழக்கப் பிரதேசம் இன்று யுத்தம் முடிவடைந்து இந்த இரண்டு வருடங்களுக்குள் பாரிய பொருளாதார வளர்ச்சிகளை எடுத்துக்காட்டியிருக்கின்றது.

ஆகவே, அந்த வீதம் இன்று எங்களுடைய நாட்டின் பொருளாதாரத்துடன் இணைக்கின்ற போது நாங்கள் பாரிய வளர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கின்றோம் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் கடந்த யுத்தம் நடந்த காலங்களில் பெரும்பாலான, மீன்பிடிப் பிரதேசங்களில் மீன்பிடிக்க முடியாமல் இருந் தது. பாலுற்பத்திகள் குறைந்திருந்தன. நெல் லுற்பத்திகள் குறைந்திருந்தன. வடக்கு, கிழக்கிலே பெருமளவு நெற்காணிகள் இருக்கின்றன. இன்று அந்த அனைத்து நிலங் களையும் மக்கள் பயன்படுத்துகின்றவர் களாக அல்லது அந்த அனைத்து நிலங் களிலும் விளைச்சலைப் பெறுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

அதற்குரிய அத்தனை உதவிகளையும் இன்று அரசாங்கம் செய்து வருகின்றது. ஆகவே, இந்த விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது நாங்கள் பொருளா தாரத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றோம் என்பது உண்மையிலே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம். ஆகவே, வெறுமனே பங்குச் சந்தையை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எடைபோட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் அவர்கள் பல இனவாத கருத்துக்களை இந்தச் சபையிலே கூறினார். அதாவது குடியேற்றங்கள் நடப்பதாகவும் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் அவர் எடுத்துக் கூறினார். கொக்கச்சான்குளம் என்கின்ற குடியேற்றம் இன்று பெயர் மாற்றப்பட்டுக் குடியேற்றப்பட்டிருப்பதாக கூறினார். உண்மையிலே 1983 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக் கின்ற பொழுதுதான் அந்தக் குடியேற்றம் இடம்பெற்றது. அவ்வாறான ஒரு கட்சிக்குத்தான் இன்று அவர்கள் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இது எங்களுடைய அரசாங்கத்தினாலோ அல்லது எங்களுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாலோ மேற்கொள்ளப்பட்ட விடயம் அல்ல.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் என்றுதான் இன்று இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கூறுகின் றார்கள். ஆகவே, அந்தக் கருப்பொருளைக் கொண்டிருக்கின்ற நீங்கள் ஏன் இவ்வாறான இனவாதங்களை பேச வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி என்று பார்க்கின்ற பொழுது அரசாங்கத்தினால் மாத்திரம் அனைத்து விடயங்களையும் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பாப்பது உண்மையிலே ஒரு வேடிக்கையான விடயம். ஏனென்றால் மக்கள் உழைப்பும் முயற்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த உழைப்புக்கும் முயற்சிக்கும் அரசாங்கம் என்ற வகையில் எங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். அதைத்தான் இன்று அரசாங்கம் மேற் கொள்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சுயகெளரவமிக்க மக்கள். அவர்கள் ஒருபோதும் உணவு கேட்டு கையேந்திய தில்லை. ஏனெனில் அவர்களால் உழைக்க முடியுமாக இருக்கின்றது.

இன்று தங்களுடைய வீடுகளைத் தாமே கட்டக்கூடிய ஆற்றல் உடையவர்களாக அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாகும். அதேநேரம் பல நிவாரணத் திட்டங்களும் வந்த பொழுது தான் எங்களுடைய மக்கள் சோம்பேறிகளாக மாறினார்கள். அதாவது சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பொழுது பல அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் அந்த மக்க ளுக்கு இலவசமாக வழங்கிய பொழுது அவர்கள் அனைவருமே சோம்பேறிகளாக மாறு கின்ற நிலை ஏற்பட்டது. உண்மையிலே ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தால் அதற்கு ஒரு கழிவறையும் கட்டி த்தர வேண்டும் என்ற வகையில் அவர்கள் கேட்டார்கள். அதைக் கூடக் கட்டுவதற்கு அவர்கள் முயற்சி யெடுக்கவில்லை. ஆகவே, அந்த மக்களை அது போன்ற ஒரு சோம்பேறிச் சமூகமாக மாற்றாமல் தமது உழைப்பையும் வினைத் திறனையும் கூட்டுகின்ற, இவ்வாறான முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்கின்ற மக்களாக மாற்ற வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் அங்கு கடந்த ஆண்டு ‘கம நெகும’ திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1010 மில் லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதே போன்று ‘திவிநெகும’ திட்டத்துக்கு 270 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாண நெல்லுற்பத்தியைப் பார்த்தால் அங்கு 2009 ஆம் ஆண்டு 1146 மில்லியன் மெற்றிக் தொன் விளைச்சல் பெறப்பட்டி ருக்கின்றது. அது தற்பொழுது அதிகரிக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றது.

இந்த ஆண்டு முடிவடைந்ததும் அந்தக் கணக்குத் தெரியும்.

அதேபோன்றுதான் 2009 ஆம் ஆண்டு பாலுற்பத்தியைப் பார்த்தால் அங்கே 18.6 மில்லியன் லீற்றர் பாலுற்பத்தி பெறப்பட்டி ருக்கின்றது. ஆகவே, அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் கூடி வருவதை நாங்கள் காணக் கூடியதாக இருகின்றது.

ஆகவே, இதனூடாக மக்கள் பொரு ளதாரத்தைப் பெற்றுத் தங்களது வாழ்க்கையை நெறிப் படுத்துவதற்கு ஆரம் பித்தி ருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் அந்த மக்களை நாங்கள் உற்சாகப் படுத்த வேண்டுமே தவிர, மாறாக நாங்கள் அதைக் குற்றஞ் சாட்டிக் கொண்டிருப்பதில் அல்லது அரசாங்கத்தை குறைகூறுவதில் எதுவித அர்த்தமுமில்லை.

மாண்புமிகு தொண்டமான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இணைந்திருக்கின்றார்.

றிஷாட் பதியுதீன் இணைந்திருக்கின்றார். அதேபோன்று மாண்புமிகு அதாஉல்லா அவர்கள், சிறிய ஒரு கட்சியை வைத்திருந்தாலும் கூட அவரும் இன்று இணைந் திருக்கின்றார். இதெல்லாம் தங்கள் சமூகத்துக்குச் சேவையாற்ற வேண்டுமென்பதற்காகவே!

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டு மென இச்சந்தர் ப்பத்திலே அவர்களிடம் அன்பாக வேண்டு கோள் விடுக்கின்றேன். ஏனென்றால் மாறாக குற்றத்தையும் குறையையும் கூறிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்குக், கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். அவ்வாறு அவர் கூறுவதாக இருந்தால் ஏன் அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித் தார்கள்? அன்று ஓர் இராணுவத் தளபதி ஜனாதிபதியாக வரமுற்பட்ட பொழுது அல்லது ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிட்ட பொழுது அவர்கள் அந்த இராணுவத் தளபதியை ஆதரித் தார்கள். இன்றும் ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆகவே,

வடக்குக் கிழக்கிலே இன்று இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பது உண்மையிலே முற்றுமுழுதாக தவ றான ஒரு விடயம்! ஏனென்றால் கடந்த பிரதேச சபைத் தேர்தல், மாநகர சபைத் தேர்தல் என்பன மிகவும் சுதந் திரமான முறையில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலே இடம்பெற்றதாக உலகக் கண்காணிப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள் ளார்கள். அத்தேர்தல்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென் றிருக்கின்றது.

அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்றி ருக்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தல்களிலே வெற்றி யடைந்திருக்க முடியாது.

ஆகவே இதுபோன்று பல உதாரணங்களை நாங்கள் கூறிகொண்டே போகலாம். உண்மையிலேயே இன்று இராணுவத்தினர் பல சேவைகளை அங்கு ஆற்றி வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட் டத்திலே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது ஓடோடிவந்து அந்த மக்களைக் காப்பாற்றினார்கள்.

இந்த முறை வெள்ளப்பொருக்கு வந்தாலும் என்ற காரணத்தினால் நாங்கள் இராணுவத் தினரை அங்கே வைத்திருக்கின்றோம். நேற்றும்கூட கிண்ணியா அடியில் முருக்கந்தீவு என்கின்ற கிராமத்து மக்களை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக இராணுவத்தின் உதவியுடன் அவர்களை வெளியேற்றினோம். இதுபோன்ற பல சேவைகளை அங்கு இராணுவத்தினர் ஆற்றிவருகின்றார்கள். ஆகவே, தவறான சில ஊடகங்கள், தவறான சில ‘வெப்’ தளங்கள் போன்றவற்றின் தகவல்களை வைத்துக்கொண்டு நாங்கள் கொலைகள் நடக்கின்றன, கொள்ளைகள் நடக்கின்றன என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இன்று வடக்கு, கிழக்கிலே அனைத்து அரசியல் வாதிகளும் சுதந்திரமாக நடமாடக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ அல்லது வேறு யாருமோ அல்ல. அன்று விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரால் கூட அங்கு செல்ல முடியாத நிலைமை இருந்தது.

ஆனால் இன்று எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முயற்சியின் காரணமாக இந்த நாட்டை அமைதிக்குக் கொண்டு வந்ததனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரும் இன்று அங்கே சென்று வருகின்றனர். அதனால் தான் இன்று அவர்கள் வடக்குக், கிழக்கைப் பற்றிப் பேசுகின்றார்கள்.

ஆகவே, இதற்கு வழிசமைத்துக் கொடுத்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை நான் இவ்விடத்தில் அடித்துக் கூறுகின்றேன்.

ஏனெனில், அத னூடாகத்தான் இன்று ஜே.வி.பி. கட்சி யினராவிருந்தாலும் சரி ஐக்கிய தேசியக் கட்சியினராக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியின ராக இருந்தாலும் சரி அனைவரும் இன்று வடக்குக், கிழக்குக்குச் சென்று வரக்கூடிய வகையில் அந்தப் பாதையை அமைத்துக் கொடுத்தவர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்பதை நான் இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மிகவும் துரித கெதியில் நாங்கள் மீள்குடியேற்றத்தைச் செய்து முடித்துள்ளோம்.

இன்று வடபகுதியிலே மாத்திரம் 1,38,482 குடும்பங்களைச் சேர்ந்த 4,55,986 பேர் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் 7546 பேர்தான் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலே எஞ்சி நிற்கிறார்கள். அப்பகுதியிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றிய பின்னர் நாங்கள் மிக விரைவில் அவர்களையும் மீளக்குடி யமர்த்தி விடுவோம்.

ஆகவே, மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்க ளுக்கு இன்னும் வீடு கொடுக்கவில்லை. அவர்கள் வாழ்வதற்கு அடிப்படை வசதி களில்லை. என்று கூறிக்கொண்டிருக்கின்றமை உங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அம்மக்கள் தற்காலிகமாக குடியிருப்பதற்கு கிட்டத்தட்ட 75,000 ரூபா பெறுமதியான தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை அமைத்துக் கொடுத்தி ருக்கிறோம். அவர்கள் விவசாயம் செய்வதற்குத் தேவையான விதை நெற்கள், உரங்கள் போன்வற்றை இலவசமாக வழங்குகின்றோம். அவர்களுக்கு கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த நீரிறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று அம் மக்களுக்குப் பல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு அம்மக்கள் குடியமர்த்தப்பட்டு இன்று அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே, இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத தீய சக்திகள் தான் இன்று இவ்வாறான கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள் என்பதை இவ்விடத்தில் கூறிகொள்ள விரும்புகின்றேன்.

இன்று வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் எங்களுடைய இளைஞர்களின் வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள். இன்று இங்குள்ளவர்கள் சம்பள உயர்வு காணாது என்றும், பொருளாதார உயர்வு காணாது என்றும் கூறுகின்றார்கள். ஆனால் அங்குள்ள ஒருவர் எட்டு மணித்தியாலம் வேலை செய்து அவரது வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாது. மாறாக அவர் மேலதிகமாக இன்னும் எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்தால் தான் தனது வாழ்க்கையைக் கொண்டு நடத்தக் கூடியதாக இருக்கும். அந்தளவில் தான் மேற்கத்தைய நாடுகளின் சம்பள மட்டம் காணப்படுகின்றது. நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்கின்ற எமது இலங்கையர்களிடம் அங் குள்ள நிலைமையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே, வெளிநாடுகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது நாங்கள் இன்று சுய உற்பத்தித் திறனுடனும் சுய திருப்தியுடனும் எமது நாட்டிலே வாழக்கூடியதாக இந்த வரவு-செல வுத் திட்டம் அமைந்துள்ளது என்பதைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன்.

No comments:

Post a Comment