Tuesday, November 29, 2011

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு புலம்பெயர் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கிறிஸ் நோனீஸ்!

Tuesday, November 29, 2011
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு புலம்பெயர் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானியாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கு புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் முதலீடு செய்வதன் மூலம் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு அளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் வாழும் அனைத்து இலங்கையர்களும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தங்களது வீடாக கருத வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

சகல இன மக்களுக்கும் சகல மதத்தவர்களுக்கும் உயர்ஸ்தானிகராலய கதவுகள் திறந்தே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment