Tuesday, November 29, 2011

ஐ.தே.க கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Tuesday, November 29, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா உள்ளிட்ட அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சரத்பொன்சேக்கா உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல், நட்டத்தை எதிர்நோக்கிய நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்றமை மற்றும் அடுத்த ஆண்டுக்கான சில காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொழும்பு நகரின் சில பிரதேசங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.

இதன் ஒருகட்டமாக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஒருபேரணி ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட மற்றுமொரு பேரணி மருதானையில் ஆரம்பமானது.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் வொசேஷால் வீதியில் இருந்து ஊர்வலமாக ஹைய்ட் பார்க்கை சென்றடைந்தனர்.

ஹைய்ட் பார்க்கிற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேரணியில் இணைந்து கொண்டதுடன், பேரணிகளில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜித் மெத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment