Tuesday, November 29, 2011

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

Tuesday, November 29, 2011
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மடு பிரதேசத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பணிடிவிரிச்சான்; பகுதியிலேயே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மெற்கொள்ளப்பட்ட சோதணைகளின் போதே வெடிபொருட்கள் நேற்றைய தினம் (28.11.2011) மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

மன்னார் பொலிஸ் அத்தியேட்சகர் லக்சிறி விஜயசேன மற்றும் உதவி பொலிஸ் அத்தியேட்சகர் உதய கேமந்த ஆகியோரின் ஆலோசணைக்கு அமைவாக மன்னார் பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. ஜெயவர்த்தனவின் வழிகாட்டலில் செனிவிரத்ன யாப்பா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரினால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி விசேட பொலிஸ் குழுவினரினால் கடந்த வாரமும் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் இருந்து ஒருதொகுதி ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டிருக்கின்றது.

இதனிடையே இம்மாதம் 4ம் திகதி (04.11.2011) விடத்தல் தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள பற்றைக்காட்டுக்குள் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 48 கண்ணி வெடிகள் விடத்தல் தீவு விஷேட பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.

அதேவேளை மாந்தை மேற்கில் உள்ள அடம்பன் வேட்டையார் முறிப்பு பகுதியிலும் மதகு ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 40 மிதிவெடிகளை விடத்தல் தீவு விசேட பொலிஸ் குழுவினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment