Sunday, November 6, 2011

சிறுவர் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

Sunday, November 06, 2011
மஹியங்கனை மற்றும் பக்கி ஹெல்ல பகுதிகளில் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பக்கி ஹெல்ல ரஜகல தென்ன பிரதேசத்தில் 15 வயதான சிறுமியொருவரை சில வருடங்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

2009 ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது

No comments:

Post a Comment