Wednesday, November 30, 2011

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்தியா அமைத்துக்கொடுக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் பணிகளை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை!

Wednesday, November 30, 2011
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்தியா அமைத்துக்கொடுக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் பணிகளை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்திய மத்திய அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்தாலோசனைகள் இடம்பெற்றுள்ளன இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழ் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் 1000 வீடுகள் மட்டுமே வடக்கில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் நிர்மாணத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பிரபேப், ஹிந்துஸ்தான் ஸ்டீல்வேக்ஸ் மற்றும் தேசிய கட்டிட நிர்மாண கூட்டுத்தாபனம் என்பன இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு மாத்திரமல்லாமல் மத்திய மாகாணத்திலும் இந்திய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment