Wednesday, November 30, 2011

சுமார் 20 வருடங்களின் பின்னர் வளலாய் மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் நேரில் பார்ப்பதற்கு அனுமதி-மகிந்த ஹத்துருசிங்க!

Wednesday, November 30, 2011
சுமார் 20 வருடங்களின் பின்னர் வளலாய் மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் நேரில் பார்ப்பதற்கு இராணுவத்தினர் நேற்று அனுமதியளித்தனர். அவற்றைப் பார்த்த மக்கள் தமது சொத்துக்களின் நிலை கண்டு கண்ணீர்விட்டனர். தமது வீடுகளைக் காணிகளைப் பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்தும்; சிலர் சென்றிருந்தனர்

வளலாய் சித்தி விநாயகர் கோயிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மற்றும் அரச அதிபர் ஆகியோர் உரையாற்றினர். அத்துடன் வளலாய் மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் தமது இருப்பிடங்களுக்கு நேற்றே திரும்பினர்.

கோயிலில் நடந்த நேற்றைய கூட்டத்தில் மீளக்குடியமரும் மக்கள் மிதிவெடிகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

மக்களின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின்னரே அவர்களின் வீடுகள் காணிகளைப் பார்ப்பதற்குக் படையினர் அனுமதி வழங்கினர். அதுவும் வளலாய் விமான நிலைய வீதியில் வளலாய் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து சென்ற மக்கள் அதன் இரு மருங்கிலும் இருந்த வீடுகள், காணிகளைக் கண்களால் விழுங்கிக் கொண்டனர். அதற்கு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீள்குடியேற இன்னமும் அனுமதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அவர்கள் வந்திருந்த மினி பஸ் தொண்டமானாறு பலாலி வீதி வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment