Sunday, October 9, 2011

புரட்சியின் முக்கிய கதாநாயகன் சே!

Sunday, October 09, 2011
தன்னிகரில்லாத ஒர் போராளியின் கல்லறை என்பது காலம் கடந்தும் வீரியம் என்பது குன்றாத மாபெரும் காவியத்தின் கருவூலமே

புரட்சியை புதைத்போது அதனை முளைக்கவைத்து எரித்தபோது உயிர்க்க வைத்த புரட்சியாளன் பூவுலக வாழ்வை நீத்ததன 44 வருடப் பூர்த்தி இன்று கொண்டாட்ப்பட்டது.

காலத்தை மாற்றித் திருத்திய அந்தக் காவியத்தின் பெயரை எவரும் மற்ந்திருக்க முடியாது இன்றும் என்றும் நினைவு கூறும் அந்தப் பெயர் தாக் சேகுவேரா.

எர்னெஸ்ற்றோ சேகுவேரா எனும் இந்த நாம்ம கனல் கக்கும் ஓர் மாபெரும் புரட்சியாளனின் முகவரி மட்டுமல்ல எக்காளமிட்ட ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் அச்சத்தின் எதிரொளி.

ஆர்ஜென்டீனாவில் 1928 ஆம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி பிறந்த சேகுவேரா மாக்சியவாதி ,மருத்துவர்,இலக்கியவாதி கரந்தடிப்போராளி யுத்தவல்லுனர், இராஜதந்திரி,எனும் பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட புரட்சியாளன்.

உலகிலுள்ள இளைஞர்கள் அதிகளவில் கவர்ந்த வசீகரமான வார்த்தை சே என்பது இன்று நிறுபணமாகியுள்ளது.

துடிப்புடன் தனது இளமைக்காலத்தில் இலத்தின் அமெரிக்க தேசமெங்கும் பயணம் செய்த சே அங்கு ஏகாதிபத்திய எகாதிபத்திய ஆட்சியாளர்களின் கொடுங்கோண்மையால் அல்லலுறும் மக்களின் வாழ்வில் விடியல் என்பது சாத்தியமா என அங்கலாய்த்தனர்.

மண்டியிட்டு வாழும் இலத்தின் அரெக்க மக்களின் வாழ்வில் எழுச்சிக்கான சிந்தனையில் ஆழ்ந்திருந்த சேகுவேரா மெக்சிகோவில் கியூப்ப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவை சந்திந்து நட்புப் பூணடார்.

பின்னர் கியூபாவின் கொடுங்கோண்மை புரிந்த படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்க்கும் பிடலின் எண்ணத்தை அறிந்த சே நூலை 26 இல் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

முன்னுதாரமான தலைவர் கெஸ்ட்ரோ புரட்சிக்காய் உயிரையே ஆகுதியாக்கும் துணிவுமிக்க இரண்டாம் நிலைத்தலைவர் சேகுவேரா மக்களின் உதவியுடன் படிஸ்டாவின் படையினர் படிப்படியாக முறியடிக்கப்பட்டன.

ஆமற்குலக ஆட்சியாளர்கள் அசாத்தியம் என நினைத்திருந்த புரட்சியை கியூபாவில் சாத்தியப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட சே கெஸ்ரோவின் தோளோடு மாத்திரமின்றி சனங்களின் சல்லடைக்கும் தோள்கொடுத்தார்.

1959 ஆம் ஆண்டு கியூபாவில் ஒலித்த சுதந்திர கீதத்தின் வரிகளில் இந்த புரட்சியாளனின் நாம்ம இடம்பெறாவிட்டாலும் அனடறி சுதந்திரத்தின் கர்த்தாவாகவும் மக்களின் கருத்திலும் சே நிறைந்திருந்தார்.

இடதுசாரிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைப் பாதுகாப்பு கட்டமைப்புபை கியூபாவில் நிறுவும் பணிகளில் முன்னின்று உழைத்த சே உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த எகாதிபத்திய கழுகுகளின் கோரப்பார்வைக்கு இலக்கானார் நீக்கற நினைக்கும் காற்றை நிறுத்திவைத்தல் என்ன சாத்தியமா?

கியூப்ப புரட்சியின் சம்மானமாக விளங்கிய கெஸ்ட்ரோ வழங்கிய கியூப வங்கித்தலைவர் நிதி அமைச்சர் என்ற கொளரவ துச்சமெண எண்ணித்துறந்த சே காக்கி தரித்து கட்டுக்குலையாத தைரியத்துடன் புரட்சியின் முட்பாதையில் கால் தடம் பதித்தார்.

புரட்சியை காட்டுத் தீயாய் இலத்தின் அமெரிக்க தேசம் எங்கும் பரப்பும் நோக்கில் மெக்சிகோ கொங்கோ பொலிவியா என பல நாடுகளுக்கு பயணம் செய்த சேகுவேரா அங்குள்ள போராளிகளுக்கு பயிற்சியும் வழங்கிளார்.

அன்று பொலிவியாவில் பொங்கி எழுந்தார் சே. பதற்றமடைந்த சீ.ஐ.ஏ யின் கழுக்குகண்கள் எண்திக்கும் நோக்கமிட்டன.

டொலர் கனவுகளுக்குள் அகப்பட்ட யூதாஸ் வழித்தோன்றல் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட சேயின் உடலை சன்னங்கள் 1965 ஆம் ஆண்டு இன்று போன்றதோர் நாளில் சல்லடையிட்டன.

சந்தடியில்லாமல் சரித்திரத்தை சல்லடை போட்டார்கள் 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற மாமனிதர்கள் என பிரபல சஞ்சிகைப்பத்திரிகை பலரின் பெயரை வரிசைப் படுத்தியர்கள் பட்டியலில் சே யின் பெயர் இடம்பெற்றமையானது சேயின் அங்கீகாரத்திற்கு சர்வதேச அங்கீகாரமாக திகழ்கிறது.

பிறர் நலனுக்காய் பொலிவியாவில் அன்று மச்சையிழந்த சேகுவேரா இன்றும் புரட்சியின் முகவரியாய் மக்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார்

No comments:

Post a Comment