Wednesday, September 21, 2011

பெல்மதுலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி!

Wednesday, September 21, 2011
பெல்மதுலையில் முச்சக்கரவண்டியுடன் கெப் வாகனம் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பெல்மதுலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று இன்று காலை ஒன்பது மணியளவில் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பின்னால் வந்த கெப் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது

விபத்தில் காயமடைந்த 10 வயது சிறுவன் பெல்மதுலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கெப் வாகனத்தில் இருந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment