Thursday,September,01,2011
வெலிகடை சிறைச்சாலையின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத பேராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களுக்கு உரிய விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தாமாகவே முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கை விட்டதாக சிறைசாலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நீதவான் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீதேறி இந்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment