Sunday, September 11, 2011

ரயில் நிலையம் அருகில் சிசுவின் சடலம்:-முச்சக்கர வண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு!

Sunday, September 11, 2011
இஹல கோட்டே ரயில் நிலையம் அருகிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை ரயிலில் பயணித்த எவரேனும் சிசுவின் சடலத்தை வீசியிருக்கலாம் என சந்தேகிப்பதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு கிரேண்டபாஸ் பராக்கிரம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

தமது பெற்றோருடன் நேற்றிரவு வைபவம் ஒன்றுக்கு வந்திருந்த சிறுவன், வீதியை கடக்க முற்பட்டபோது முச்சக்கர வண்டியில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment