Wednesday, August 31, 2011

அமெரிக்காவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

Wednesday,August,31,2011
ஐரின் சூறாவளி காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் வீடு திரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இந்த சூறாவளியால் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தூதரகத்தின் ஆலோசகர் வசந்தா பெரேரா குறி்ப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவில் உள்ள பெளத்த விகாரைகள் ஊடாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

001 202 352 0355 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பணிப்பாளர் சரத் திசாநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment