Tuesday, August 30, 2011

புது டெல்லி மகாநாட்டினைத் தொடர்ந்து, தமிழ் கட்சிகள் சென்னையில் சந்திப்பு!

Tuesday, August 30, 2011
சென்னை: புது டெல்லியில் நடந்த இலங்கை தமிழ் கட்சிகளின் மகாநாட்டினைத் (23,24-08-2011) தொடர்ந்து 29-08-2011 அன்று காலை தமிழ் கட்சிகள் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.

தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப் (பத்மநாபா. ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஆகிய நான்கு கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன.

தமிழர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் செல்வதற்கு சரியான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதென்றும்,

இது தொடர்பாக எமது நாட்டிலும், உலக நாடுகளிலும் வாழும் அறிவு ஜீவிகளின் ஒருங்கிணைப்பையும், ஆலோசனையையும் பெறுவதென்றும்,

தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்ற வகையில் கூட்டுத் தலைமை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்த மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக்கூட்டணி,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,

பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எப்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

No comments:

Post a Comment