Wednesday, August 31, 2011

ஹப்புதளை இரட்டை கொலை – 22 பேர் சரண்!

Wednesday,August,31,2011
ஹப்புத்தளை – தொட்டலாகலை தோட்டத்தில் இடம்பெற்ற இரட்டைகொலை தொடர்பில், மேலும் 22 பேர் காவற்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

இது தொடர்பில் ஏற்கனவே ஐந்து பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கிறீஸ் மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில், எல்லை – கும்பல்வெல பிரதேசத்தை சேர்ந்த இருவர் கடந்த 11ம் திகதி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

இந்த நிலையில் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும், கடந்த 27ம் திகதி பண்டாரவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களை அடுத்த மாதம் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் 22 பேர் இந்த கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 10கத்திகள் மற்றும் ஒரு கோடரியுடன், சட்டத்தரணி ஒருவரின் ஊடாக சரணடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment