Tuesday, August 30, 2011

பசுபிக் ஆகாய மார்க்க திரளணி 2011” இனிதே நிறைவு!

Tuesday, August 30, 2011
என்றும் இல்லாதவாறு ரத்மலானை விமானப் படைத்தளத்தில் இடம்பெற்ற பிரமிப்பூட்டக்கூடிய பசுபிக் ஆகாய மார்க்க திரளணி கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி இனிதே நிறைவு பெற்றது.

உலக நாடுகளின் விமானப்படைகளுக்கிடையே சிறந்த்தொரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத் தரளணிப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பல நாடுகளைந் சேர்ந்த படையினரும் இதில் கலந்து கொண்டனர்.

ஒருவாரகாலமாக இடம் பெற்ற இப் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து படைவீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளை தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ஐக்கியஅமேரிக்காவின் விமானப்படையின்c130, ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின்c130 J ஆகிய விமானங்கள் இப்பயிற்சியில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன.

இகன் இறுதி நிகழ்வில் ரத்மலானை படைத்தள கட்டளைத்தளபதி எயாகொமடோ சுமங்கல திஸ்ஸ அவர்களால் இருதியுரை நிகழ்த்தப்பட்டு அனைத்து படைவீர்ர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், நாடுகளுக்கிடையே ஞாபகச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment