Friday, July 15, 2011அதிகளவான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வடையும் என தெரிவி;;க்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறிய அகதிகளை மீள் குடியேற்றும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த பெருமளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வருவதாகவும், சென் லூசியா, மலேசியா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளிலிருந்து சிறியளவிலான அகதிகள் நாடு திரும்பி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 2800 இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment