Thursday, July 14, 2011

இலங்கை பொறுப்புடன் செயற்பட்டது – யுனிசெப்!

Thursday, July 14, 2011
மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற சமயம் பொதுமக்களின் பாதுகாப்பின் பொருட்டு இலங்கை பொருப்புடன் நடந்து கொண்டதாக யுனிசொப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இலங்கை அரசாங்கமும், படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமது அமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும் யுனிசொப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறுவர்களை படையில் சேர்த்துக்கொண்டது புலிகளே, பொதுமக்கள் 40 ஆயிரம் பேர்வரையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் வேலைத்திட்டத்தை படையினரும், அரசாங்கமும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், யுனிசொப் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment