Sunday, June 30, 2019

புலிகள் பயங்கிரவாதிகள் மீண்டும் கொலைகளை ஆரம்பிக்க வேண்டுமாம்: சம்பந்தன்!!

ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். சில முக்கிய

கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம்!

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிரணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.உடுகம்பொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்

ரஷ்யாவுடன் ரூ.200 கோடியில் டாங்க் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம்!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா ரூ.200 கோடிக்கு நவீன டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது...எம்.ஐ.- 35 ஹெலிகாப்டர்...இந்தியாவின் எம்.ஐ.35 போர் ஹெலிகாப்டர்களில் பொருத்தி ஏவுவதற்கு ஏற்றாற்போன்றவை இந்த ஏவுகணைகள். இந்திய விமானப்படையின் பழமையான அமெரிக்க வகை அப்பாச்சி கன்சிப்ஸ்ஐ மாற்றிவிட்டு, இந்தவகை ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன...ஏவுகணை ஒப்பந்தம் :.கடந்த வாரம் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர அனுமதியை இந்தஒப்பந்தத்திற்கு வழங்கியுள்ளார். இந்திய விமானப்படை அவசரகாலத்தில்

Saturday, June 29, 2019

தமிழக தலைமை செயலர், டிஜிபி நியமனம்!

தமிழக தலைமை செயலாளராக சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ,தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் 2016 டிசம்பரில் பொறுப்பேற்றார்; நாளை (ஜூன்30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இதனை தொடர்ந்து, புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்!

சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று(28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.இரண்டு அல்லது மூன்று மாதக்

பொருளாதாரம், தீவிரவாத சவாலை எதிர்கொள்ள 5 அம்ச அணுகுமுறை: பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு!

பொருளாதாரம், தீவிரவாத சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்,’ என வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, அதற்கான 5 அம்ச அணுகுமுறை தேவை என்றும் கூறியுள்ளார்.இருபது நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி-20 மாநாட்டின் 14வது மாநாடு,  ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரில் நேற்று தொடங்கியது, இன்று வரை நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக ஜி-20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் ஒசாகாவில் குவிந்துள்ளனர். இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள், ஜி-20 அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளன. ஜி-20 மாநாட்டின் இடையே, பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டமும் தனியாக நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:

Friday, June 28, 2019

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் 'பல்டி'!

சபாநாயகர் தனபால் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்போது வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 28) மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கூட்டம் வரும் திங்கட்கிழமை (ஜூலை 1) க்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், முந்தைய அரசியல் சூழலில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுத்த அவசியமில்லை என கருதுகிறோம். சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது.

முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் செய்த தவறை, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் சுமத்தக் கூடாது: பசில்!

ஒரு தேசத்துக்கான ஒரே இனமாக நின்று செயற்பட வேண்டுமாக இருந்தால், யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுச் சட்டம் நாட்டுக்கு அவசியம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று முஸ்லிம் உலமா கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு பிரதேசத்துக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ வரையறுக்கப்பட்ட ஒரு கட்சி அல்ல. தமது கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலத்துக்குள் உள்ளுராட்சி சபைத் தேர்தலை வெற்றிகொள்ள முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று டிரம்ப்-மோடி சந்திப்பு: வரி விவகாரத்திற்கு தீர்வு!

ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கும் நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை இன்று சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. இதில் வரி விவகாரம் குறித்து டிரம்ப் வலியுறுத்துவார் என தெரிகிறது.
ஜி - 20 நாடுகளின் கூட்டம், கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின், ஒசாகா நகரில் நடக்கிறது. இரண்டு நாள் நடக்கும் இந்தக் கூட்டத்தில், ஜி - 20 அமைப்பில் உள்ள, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டுக்கு இடையே, உலகத் தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருந்த,300,ஜெலக்நைட்கள்,ஆயிரம் டெடனைட்டர்கள்!

மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்   தெரிவித்தார்கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மில்ஹான் என்பவரிடம் சி.ஐ.டி. யினர் மேற்கொண்ட விசாரணையில், மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் ஸஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றைக் கடந்த மாதம் பொலிசார் கண்டுபிடித்தனர்.நேற்று

Thursday, June 27, 2019

அமெரிக்காவை காலம்காலமாக எல்லா நாடுகளும் சுரண்டுகின்றன: டிரம்ப்!

அமெரிக்காவை காலம்காலமாக எல்லா நாடுகளும் சுரண்டுகின்றன. இனி அது நடக்கப்போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஜப்பான் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜப்பானில் பேச்சு நடத்த இருப்பதாகக் கூறினார். அதில் பல நாடுகள் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார். சென்ட் செலுத்தாத சீனா :-நீண்ட காலமாக அனைத்து நாடுகளும் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சுரண்டி வருவதாகவும், ஆனால் இனி அது நடக்காது என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்றும் அவர் தெரிவித்தார். தான் அதிபராவதற்கு முன்னர் ஒரு சென்ட்

மைத்திரியின் முடிவுக்கு பிரிட்டன் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கையுடன் ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது.பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும்.மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை இலங்கை கைவிட விரும்புகிறது

இலங்கையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் நால்வருக்கு தூக்கு!

இலங்கையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு, நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உறுதி செய்தார். இலங்கையில், 43 ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.நான்கு பேருக்கு உறுதியானது மரணம்; கையெழுத்திட்டார் மைத்திரி! இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை. சமீபத்தில் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அதற்கான அடுத்த கட்ட வேலைகளையும் ஆரம்பித்தார்.மரணதண்டனை

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லா உறுப்பினர் பதவிக்கு, இந்தியாவை தேர்ந்தெடுக்க, சீனா, பாகிஸ்தான் உட்பட, ஆசிய - பசிபிக் பிராந்தியத் தைச் சேர்ந்த, 55 நாடுகள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. 2021 மற்றும் 2022 என, இரண்டு ஆண்டுகளுக்கானது இந்தப் பதவி.இந்தியாவுக்கு, சீனா, பாக்., உட்பட, 55 நாடுகள்,ஆதரவு!:  ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உறுப்பினர், பதவிஐக்கிய நாடுகள் சபையின் உயரிய அமைப்பான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தற்போது, 15 நாடுகள் இடம் பெற்றுள்ளன. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன்

Wednesday, June 26, 2019

பயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை: மகேஷ் சேனாநாயக்க!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தனக்கு ஒருபோதும் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி சாட்சியமளிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறினார்.
பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தன்னுடன் மிகவும் சிறந்த முறையில் உரையாடியதாகவும், அது ஒரு போதும் தனக்கு அழுத்தம்

கண்டியில் ஹக்கீமிற்கு பத்து விகித முஸ்லிம்கள் கூட வாக்களிக்கவில்லை: எஸ்.பி.திசாநாயக்க!

நாட்டில் தற்பொழுது முஸ்லிம்கள் சார்பாக எழுந்துள்ள பிரச்சனைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஹக்கீம், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை ஏனைய அரசியல் கட்சிகளிடமிருந்து வேறாகப்பிரித்து தனது அரசியலினை இஸ்தீரப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியிலேயே கச்சிதமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். இந்த செயற்பாட்டினையே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணிலும் திரை மறையிலிருந்து ஹக்கீமினை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
ஆனால், முஸ்லிம் காங்கிரசினை இஸ்தாபித்த மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரஃப், ஹக்கீமைப் போன்று இந்நாட்டு முஸ்லிம்களை ஏனைய சமூகத்திடமிருந்தோ அல்லது பெரும்பான்மைக்

உலகின் சக்தி வாய்ந்த தலைவராக' பிரதமர் மோடி தான் "டாப்'

உலகின் சக்தி வாய்ந்த தலைவராக' பிரதமர் மோடி தேர்வானார். பிரிட்டனை சேர்ந்த "பிரிட்டிஷ் ஹெரால்ட்' பத்திரிகை, "2019ல் உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்' என்ற ஆன்லைன் கருத்துக் கணிப்பை நடத்தியது. போட்டியில் 25 உலகத் தலைவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாக்களித்தனர். இதில், 31 சதவீத ஓட்டுகளுடன் பிரதமர் மோடி முதலிடம் பெற்றார். அடுத்த மூன்று இடங்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப, சீன அதிபர் ஜி ஜின்பிங் பெற்றனர். பருவநிலை மாற்றத்துக்கு உரிய நடவடிக்கை, பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை, மருத்துவ காப்பீட்டு திட்டம், ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கியது போன்றவை மோடியின்

Tuesday, June 25, 2019

அமெரிக்கா இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனை நீக்கம்!

அமெரிக்கா இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனை நீக்கம்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அமெரிக்க அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தது. நேற்று இலங்கை மீதான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த Level 3 இல் இருந்து தற்பொழுது

இராணுவ வாகனம்: புகையிரதம் விபத்து : 5 இராணுவ வீரர்கள் பலி!

கிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருப்பாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவ மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Monday, June 24, 2019

19 ஆம் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்ய காலம் போதாது: மஹிந்த ராஜபக்ஷ!

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்வதற்கான கால அவகாசம் போதுமானதாக இல்லை என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
ஹங்குரன்கெத்த - மாதம்வெல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பின் 18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்தச் சட்டங்களை நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

ஈரான் ராணுவ கம்ப்யூட்டர்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கு நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தன் ஆளில்லா, 'ட்ரோன்' எனப்படும், உளவு விமானம் வீழ்த்தப்பட்
டதற்கு பதிலடியாக, ஈரானின் ராணுவ கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
 
மத்திய கிழக்கு நாடான ஈரானுடன், அமெரிக்கா, 2015ல், அணு ஒப்பந்தம் செய்தது. கடந்தாண்டு இந்த ஒப்பந்தத்தை, அமெரிக்கா விலக்கி கொண்டது. போர் சூழ்நிலைஅதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மத்திய கிழக்கு கடல் பகுதிகளில், தன்

Sunday, June 23, 2019

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுடன் புரிந்துணர்வுடன் செயற்படு!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பிற்கான புலனாய்வுப் பணிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
மாதுலுஓய விசேட படை முகாமில் நேற்று ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் சேவைக்கு ஜனாதிபதி மைத்ரிபால பாராட்டு!

தேசிய அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிராத போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் ஆற்றப்படும் சிறப்பான சேவையை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாராட்டினார்.திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் பயற்சிபெற்ற அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமிக்கும் நிகழ்வு, முப்படையின் தளபதியான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தேசிய பொருளாதார அபிவிருத்தி போன்றே ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கும் முப்படையினர் வழங்கும் பங்களிப்பை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக

தமிழகத்தில் மலர்கிறது தாமரை டிவி! ஹெச் ராஜா ஆரம்பிக்கும் புதிய சேனல்!

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தாமரை டிவி என்கிற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கென்று தனியாக தொலைக்காட்சி சேனல்கள் வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில் திமுகவிற்கு கலைஞர் செய்திகள் சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகள் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகள் ஆக செயல்பட்டு வருகின்றன.
இதேபோல் அதிமுகவிற்கு நியூ ஜே எனும் பெயரில் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் இது ஜெயா ப்ளஸ் என்கிற பெயரிலும் திமுகவிற்கு கேப்டன் டிவி என்கிற பெயரிலும் தொலைக்காட்சிகள் உள்ளன.

Saturday, June 22, 2019

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உட்பட ஒன்பது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை!

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உட்பட ஒன்பது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட விசாரணை பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில்
பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார்.  ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்போது தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Friday, June 21, 2019

ஏப்ரல் 21 தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவு!

நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஏப்ரல் 21 தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன.இந்த தாக்குதல்களில் காயமடைந்த பலர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும் இன்றைய தினம் பல தேவாலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம் தற்போதும் மீளமைக்கப்பட்டு வருகிறது.இந்த தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 73 வயதான ஒருவர், நேற்று

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையில் அரசாங்கம் முழுமையான பொறுப்பை வெளிப்படுத்தவில்லை!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையில் அரசாங்கம் முழுமையான பொறுப்பை வெளிப்படுத்தவில்லை என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.பரிசுத்தப் பாப்பரசரை சந்திப்பதற்காக வத்திக்கான் சென்றுள்ள அவர், ரோமில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது இதனைக் கூறியுள் ஆனால் அந்த எச்சரிக்கை அடிப்படையில் செயற்பட அரசாங்கம் தவறிவிட்டது.தாக்குதல் இடம்பெறவுள்ளது என்பது தமக்கு தெரிந்திருந்தால், அனைத்து தேவாலயங்களையும் மூடச் சொல்லி மக்களை வெளியேற்றி

சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார்: சத்யநாராயண ராவ்!

வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார். பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்க உள்ளது.தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு இயற்கையே காரணம்.

Thursday, June 20, 2019

தேர்தல் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார் மைத்திரி!!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு இடம் இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு
பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் சரியான தருணத்தில் இது குறித்த தனது முடிவினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவ்வித நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்த மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு

Wednesday, June 19, 2019

வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு!

மதிமுக பொது செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார்.
அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர்மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற்று வருகிறது.இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.

பொசன் பூரணை பருவகாலத்தில் நாடளாவிய ரீதியில் அதிரடி சுற்றிவளைப்புக்களில் 1522 பேர் கைது!

பொசன் பூரணை பருவகாலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்து 522 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது ஆயிரத்து 541 சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, சுமார் 50 லட்சம் பெறுமதியான மதுபானம், கோடா ஸ்பிரிட், வடிகட்டும் உபகரணங்கள் மற்றும்போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தோழர் நாபாவின் 30வது நினைவு தினம்!

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19  பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் நிலைகுலைந்தது என்பது யாவரும் அறிந்தது. புலிகள் தமது பாசிசக் கொள்கைகளின் நிமித்தம் ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்டனர் என்பது வரலாற்றுப் பதிவு. இப்பதிவுகளின் வரிசையில் இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் புலிகளினால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட  Eprlf தலைவர் பத்மநாபா  நினைவு கூருகின்றனர். 
புலிகளின் கோர வெறியாட்டத்தை நினைவு கூருகின்ற அதே சமயத்தில் அமரர் பத்மநாபாவினால் வழிநடத்ததப்பட்ட அரசியல் வியாபாரிகள் சிலர் இன்றும் புலிகளை தம் ஏகப்பிரதிநிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.மேலும் அண்மைக்காலம் வரை புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக்

ஐ.எஸ். ஆதரவு தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா? - புழல் ஜெயிலில் 3 பயங்கரவாதிகளிடம் விசாரணை

தமிழகத்தில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், புழல் ஜெயிலில் உள்ள 3 பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் இலங்கையை உலுக்கியது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் இடம்பெறும்: சிறிலங்கா பொதுஜன பெரமுன!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் இடம்பெறும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய மைத்ரி-ரணில் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு சூழச்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அரசியல் சாசனத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஷ் அழகபெரும தெரிவித்திருக்கின்றார்.கொழும்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் ஜி.எல்.பீரிஸ்

அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்னை தீவிரம் : அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் செய்து கொண்ட, அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும், ஈரானின் புரட்சிகர படையை, தீவிரவாத அமைப்பாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என, மற்ற நாடுகளையும் நிர்பந்தித்து வருகிறது.இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்னை தீவிரமடைந்து வருகிறது.   இந்நிலையில், ஈரானுக்கு அருகில் உள்ள, ஓமன் வளைகுடா கடல் பகுதியில், எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னணியில், ஈரான் உள்ளதாக, அமெரிக்கா கூறி வருகிறது.அதைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் அவற்றின் கடல் பகுதியில், தனது படை பலத்தை

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலையில் தொடர்புடையவர் உட்பட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். ஒரு வீரரும் வீரமரணம்  அடைந்தார்.தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்த்நாக்  மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை  அப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு  பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் அதிரடியாக சுட்டனர். பாதுகாப்பு படை

Monday, June 17, 2019

இலங்கை, இந்தியப் படையினர் குடும்பத்துடன் பரஸ்பர விஜயம்!

இலங்கை, இந்தியப் படைகளைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.  படையினரிடையே நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை மேற்கொள்ளும் நோக்கிலும், ஒரு சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையிலுமே, இவ்விஜயங்கள் ஏற்பாடு செய்யப்ப
ட்டுள்ளனவென, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியப் படைகளின் 159 வெளிநாட்டு பிரதிதிநிதிகள் தமது மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக இலங்கைக்கான விஜயத்தை ஜூன் 15ஆம் திகதி

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பொசன் வாழ்த்து செய்தி!

பொசொன் போயா தினத்தின் ஆசீர்வாதத்தினால் உங்களது வாழ்க்கை ஒளிமயமாகி அனைத்து இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் கருணையும் இரக்கமும் வளர வேண்டுமென பிரார்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை வரலாற்றினதும் இலங்கை மக்களினதும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை ஒன்றாக பொசொன் போயா தினத்தைக் குறிப்பிட

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில் !

இந்திய வரலாற்றிலேயே 1988-ம் ஆண்டுதான் அதிக வெப்பநிலை இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. அதாவது சுமார் 33 நாள்கள் வரை தொடர்ந்து அதிக வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது அந்த அளவுக்கு இணையாக மீண்டும் இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடர்ந்தால் முன்னதாக இருந்த பதிவை 2019-ம் ஆண்டு முறியடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகப் பீகாரின் பாட்னா,

Sunday, June 16, 2019

சர்ச்சைக்குரிய சட்டம் ஹாங்காங்கில் ரத்து!

சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹாங்காங்கில், சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்றச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அதை தற்காலிகமாக ரத்து செய்வதாக, அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.அண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்படும், தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு, ஒட்டு மொத்த நிர்வாகத்தின் தலைவராக, கேரி லாம் என்பவர் செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில், கைதிகள்

Saturday, June 15, 2019

ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது!

ஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த சிலர் அவர்களுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 12-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன் உள்பட 7 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி!

தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஷ்கெக் சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில்

நேற்று கைது செய்யப்பட்ட மொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையுடன் தொடர்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் என்பவரே வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் கொலையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். 
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளில் முக்கியமான ஐவரை மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த வேளையில் கைது

Friday, June 14, 2019

சஹ்ரானுடன் நேரடி தொடர்பு – கண்டியில் இருவர் கைது!

உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌவ்ஹீத் ஜமாத்தின் தலைவருமான பயங்கரவாதி சர்ஹானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினரும்,பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கண்டியிலுள்ள ஹின்குள்ள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக

டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை: ஈரான் தலைவர்!

ஈரான்-அமெரிக்கா இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.இந்த நிலையில் ஈரான்-அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாண இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது.

அதன் பின்னர் இருவரும், ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமேனியை சந்தித்து பேசினர். அப்போது, அவரிடம் ஈரான்-அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக ‌ஷின்ஜோ அபே கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அயத்துல்லா அலி காமேனி, டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை என கூறினார்.

தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதி! கோவையில் 2ம் நாளாக அதிரடி ரெய்டு!

 தேசிய புலனாய்வு முகமையைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீசாரும் நேற்று மூன்று இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போன்று தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்ததும், என்.ஐ.ஏ.,வின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.இலங்கையில் கடந்த, ஏப்., 21, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில், 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 500 பேர் காயமடைந்தனர். இக்கொடூர தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஐ.எஸ். ஐ.எஸ்.,

Thursday, June 13, 2019

இணையதளத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்!

இணையதளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யாவை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டாவா: 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைதான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில்தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உ
லகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணையதளங்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் எதிரான மனப்பான்மையை உருவாக்கும் இம்மாதிரியான செயல்களை

Wednesday, June 12, 2019

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் திடீர் சோதனை!

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் ஏழு இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் கேரளா மற்றும் தமிழகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவையைச் சேர்ந்த சிலர் இலங்கை குண்டுவெடிப்புக்கு ஆதரவாக கருத்து

அதிக வரியை, இந்தியா ரத்து செய்ய வேண்டும்: அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்!

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் அதிக வரியை, இந்தியா குறைக்கணும்; ரத்து செய்ய வேண்டும், என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தனியார், 'டிவி'க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: அமெரிக்கா என்ற வங்கியை, கொள்ளையடிக்க அனைவரும்
விரும்புகின்றனர், முயற்சிக்கின்றனர். அதனால் தான், மற்ற நாடுகளுடனான நம் வர்த்தக உறவில் பெரிய பற்றாக்குறை உள்ளது. இதுதான் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது. இதற்கு முன், இது

ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு கெம்பசில் அதுரலிய ரத்ன தேரோ!

இன்னும் 10 நாட்களுக்குள் ராணுவ தொழிநுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படவேண்டுமென்று நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த UNP தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரத்ன தேரோ நேற்று  ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்கள
ப்பு பல்கலைக்கழகத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடமாகும்.அத்துடன் அந்த பல்லைக்கழகம் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. அதற்கு சவுதி உட்பட இஸ்லாமிய

முஸ்லிம் தலைவர்கள் “இரு முகம் காட்டுகிறார்கள்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!

சிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, இன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று இலங்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஏனைய சமூகங்களுக்கிடையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குருணாகல்