
இலங்கை வருகை தந்துள்ள ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாசிக்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம் பெற்றதாக எதிர்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார இன்னல்களுக்கு முன்னிலையில் இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் முகங் கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுதந்திர வர்த்தக கொள்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையின் தற்போதைய, அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், கரு ஜயசூரிய மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துரையாடினர்.