
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொப்பி புயூலொச் தெரிவித்துள்ளார்.
பிரதி உயர்ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யுத்த வலயத்தின் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன், புயூலொச் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல், வடக்கின் அபிவி;ருத்திப் பணிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாக புயூலொச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதி உயர்ஸ்தானிகர் புயூலொச் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பலருடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment