Thursday, July 31, 2014

மணல் கொள்ளை, இலங்கை பிரச்னை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Thursday, July, 31, 2014
சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார். இதன்பின், தேமுதிக, மார்க்சிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் சில சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச அனுமதி கோரினர். இதற்கு சபாநாயகர்  தனபால், ‘‘எல்லோரும் இன்று ஒரு முடிவுடதான் வந்துள்ளீர்கள். இன்று காலைதான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுத்தீர்கள். அவற்றுக்கு அந்தந்த துறையில்  இருந்து பதில் கி¬டைத்ததும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார். இதன்பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரச்னைகளை பற்றி பேச அனுமதிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு  கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தேமுதிக உறுப்பினர்கள் சட்டசபையில் அமர்ந்திருந்தனர்.

சட்டசபைக்கு வெளியே உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணசாமி (பு.த.):  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைசேர்ந்த ஓய்வுப்பெற்ற நீதிபதி அசோக்குமார்,  தினகரன், கேஜி.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் நீதிபதி கட்ஜூ தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். பிரஸ் கவுன்சிலில் இருந்துகொண்டு  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் கட்ஜூவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள அந்நாட்டு ராணுவ  கருத்தரங்கில் இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது ஆகியவை பேச அனுமதி கேட்டேன். சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் வெளிநடப்பு செய்தேன்.

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. இதுபற்றி மானிய கோரிக்கை மீது பேசும்போது முறையாக பதில்  தெரிவிக்கவில்லை. மணல் கொள்ளை குறித்து கருத்து சொன்ன மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை  என்றார். இதனால் அவர் மீது முதல்வர் வழக்கு தொடுத்துள்ளார். மணல் கொள்ளை பற்றி வெளியேயும் பேச முடியவில்லை. உள்ளேயும் பேச முடியவில்லை. இதுபற்றி  விவாதிக்க அனுமதி மறுத்ததால் வெளி நடப்பு செய்தோம்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):மணல் கடத்தலை தடுக்க சென்ற ஏட்டு, டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். மணல் கடத்தல் தடுக்க செல்லும் அதிகாரிகளுக்கும்  கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாருக்கு பாதுகாப்பு  இல்லை. மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் சொல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த காரணத்தால் சட்டசபையில் இருந்து வெளியேறினோம்.பாமக கணேசன்: விழுப்புரம் மாவட்டம் மேலச்சேரி பச்சையம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியை வனத்துறையினர்  அடைத்துவிட்டனர். இது பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இதுவரையில் பேசவில்லை:மொரிசன்!

Thursday, July, 31, 2014
இலங்கை::இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இதுவரையில் பேசவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவிலிருந்தே அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளனர். எனவே, இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி படகு மூலம் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்து பேசுவதில் பயனில்லை என மொரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழ்ந்து வந்த அல்லது இந்தியாவிலிருந்து புறப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகே அவுஸ்திரேலியாவை வந்தடைந்தது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகில் 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் படகில் 37 சிறுவர் சிறுமியரும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை மீள அழைத்துக் கொள்ளுமாறு இந்தியாவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மூன்று தீர்வுத் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஒரேஞ் பாதுகாப்பு படகுகளின் மூலமாக புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டதாக என்ற கேள்விக்கு நேரிடையான பதில்கள் எதனையும் மொரிசன் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கைகள் அவுஸ்திரேலியாவிற்குள் அவர்களை தங்க வைத்துக் கொண்டு பரிசீலனை செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மதிமுக.வினர்!

Thursday, July, 31, 2014
சென்னை::அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று மதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எச்.சீமாபஷீர்,.

வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எம்.இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஏ.மகரூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் எச்.எம்.முஸ்தபா, துறைமுகம் பகுதி மாவட்ட பிரதிநிதி எஸ்.எம்.ஜாஹீர் ரபி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா.துரைசாமி உடன் இருந்தார்.

Wednesday, July 30, 2014

காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 700 முதல் 800 வரையிலான முறைப்பாடுகளே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது: மெக்ஸ்வெல் பரனகம!

Wednesday, July 30, 2014
இலங்கை::காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 19000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 700 முதல் 800 வரையிலான முறைப்பாடுகளே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளே பூர்த்தியாகியுள்ளதாகவும் விசாரணைகள் தெடார்பிலான கால வரையறைகளை உறுதியிட்டு குறிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

ஆணைக்குழுவின் தவணைக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளை பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் ஐந்து அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு அமர்வின் போது குறைந்தபட்சம் 200 முறைப்பாடுகள் பதிவிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவான முறைப்பாடுகள் காணப்பட்டால் அந்தப் பகுதியில் பிரிதொரு தடவையும் விசாரணைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாதகத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் சரியான திசையில் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கப் படையினரிடம் சரணடைந்து அதன் பின்னர் காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடாத்த மற்றுமொரு விசாரணைக்குழு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய சாட்சியங்களுடன் இவ்வாறான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டால் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி முடிக்க சில ஆண்டு காலம் அவசியமாகின்றது எனவும், இரண்டாம் உலக யுத்தம் குறித்த விசாரணைகள் இன்றும் தொடர்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் திடமான ஆதாரங்கள் கதிரட்டப்பட்டாலே குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் வெளிநாடுகளில் கூட புகலிடம் பெற்றுக்கொண்டிருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக குறித்த நாடுகளிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைந்து அதன் பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பட்டியல் பூரணமாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்துவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானதே, அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதியே அறிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை  புலிகளின் கடத்தல்கள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளது என மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்,கடற்படை வீரர் கைது!

Wednesday, July 30, 2014
இலங்கை;;போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கடற் படை வீரர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை  ஊடகப்  பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணக்குலசூரிய  தெரிவித்தார்.
போதைப்பொருள் அருகில் வைத்திருந்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி  கைது!
 
நாடாளுமன்ற  உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
 
பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,47 வயதான சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற  உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க சென்ற வாகனம் நேற்று    இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியில் எஸ் வளைவில் விபத்துக்குள்ளாகியது.
 
இவ்விபத்தில் காயமுற்ற பாரளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிகளின் எளினலால் காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் ஆனந்தியிடம் தனது உறவினர்கள் பற்றி ஆவேசத்துடன் கேள்வி!

Wednesday, July 30, 2014
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவரான ஆனந்தி சசிதரனால் முல்லைத்தீவு நீதி மண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தொடரப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளுக்காக 2014 ஜூலை 21 ஆம் திகதி ஆனந்தி சசிதரன் சமூகமளித்திருந்தார். அங்கு அவர் எதிர்பாராத வகையில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஆனந்தியின் கனவரான எழிலனால் கடத்தப்பட்ட தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே என்று மிகவும் ஆவேசத்துடன் கேள்வியெழுப்பினர், இதனால் ஆனந்திக்கு பாதுகாப்பு படையினரின் உதவியை நாட வேண்டிய நிலமையும் ஏற்பட்டது.

நீதி மண்றத்திற்கு முன்னால் தங்களது உறவினர்கள் தொடர்பில் ஆனந்தியிடம் கேள்வி கேட்க திரண்டிருந்த மக்கள்
புலிகளில் அதிகமானோர் வன்னியைச்சேர்ந்வர்களே இருந்தனர் அதில் அதிகமான சிறுவர்களும் அடங்குவர். எல்ரிரிஈயினரும் ததேகூ இணைந்து செய்த இக் குற்றச்செயல்களை யாழ் மக்கள் வெளியுலகத்துக்குகொன்டு வரவேன்டும்
நவீனமான சுவரொட்டிகள் இந்த சாதாரண மக்களால் அச்சிடப்பட்டிருக்கவில்லை ஆனால் தங்களது உறவினர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைபிடத்திலும் எல்ரிரிஈ இடத்திலும் வினா எழுப்ப இவர்கள் துணிந்தவர்களாக காணப்படனர்
தமிழ் மக்கள் இவ்வாறு திரண்டு வந்து தங்களது பிள்ளைகளைக் கேட்டு தீவிரமாக நடந்து கொள்வார்கள் என்று அனந்தி எதிர்பார்க்கவில்லை
தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர் ஆனந்தி ஒரு பாதிரியுடன் வான் ஒன்றில் நீதி மன்றத்திற்க்கு சமூகமளித்திருந்தார்.

இந்த தமிழ் குடும்பங்களுக்கு தகுந்த பதில்கள் தேவைப்படுகின்றது
ஐநா வின் மனித உரிமைகள் அமைப்பு இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமும் இவர்களது துன்பத்தை கேட்கவில்லை
எந்த ஒரு வெளிநாட்டு தூதுவரும் கானாமற் போன இவர்களது உறவினர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
தமிழ் மக்கள் திரண்டு வந்து தங்களுடைய பிள்ளைகள் சம்பந்தமாக தன்னிடத்தில் கேட்டு முறண்படுவார்கள் என்று ஆனந்தியும் எதிர்பார்க்கவுமில்லை.
தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர் என்ற வகையில் ஆனந்தி இவ்வாறு கேள்விகளுக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்கவுமில்லை.
ஆனந்தியாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குற்றம் சுமத்திப் பேசப்பட்ட இராணுவத்தினரின் உதவியை கோர வேண்டிய நிலையும் ஆனந்திக்கு ஏற்பட்டது.. !
ஆனந்தி சசிதரனிடம் பதில் கேட்டு 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நின்றிருந்தனர்..
ஆனந்தியிடத்தில் 2014 ஜூன் 14 இல் இருந்து அவர்களது கேள்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜுன் மாத்தில் அனந்தி, சுரேஷ் பிரேம சந்ரன், சிவாஜிலிங்கம், செல்வராசா கஜேந்ரன், கஜேந்ரன் பொன்னம்பலம், துரைராசா ரவிகரன், அன்டோனி கஜேந்திரன் போன்ற த.தே.கூ இன் உறுப்பினர்களுடன் நீதிமன்றத்திற்க்கு வந்திருந்தார், இவரின் கணவனுக்கு சிறுவர்களைக் கடத்தி கட்டாயப்படுத்தி போராளிகளாக்கிய குற்றச்சாட்டும் உண்டு..
ஜூலை 21 ஆம் திகதி ஆனந்தியுடன் கிரிஸ்தவ பாதிரியார் மாத்திரமே காணப்பட்டார்.
இந்த தமிழ் குடும்பங்களுக்கு தகுந்த பதில்கள் தேவைப்படுகின்றன ஐநா வின் மனித உரிமைகள் அமைப்பு எல்ரிரிஈ இயக்கத்தால் கடத்தப்பட்ட சிறுவர்கள் எங்கே என்று ஆனந்தியிடம் கேட்கவில்லை, எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமும் இவர்களுக்கு கை கொடுக்கவில்லை எந்த ஒரு வெளிநாட்டு அமைப்போ,நவிப்பிள்ளையோ கானாமற் போன இவர்களது உறவினர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுமில்லை இதனால் இக்குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு உதவியாளர் திரு.கணகரடனம் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கு மனு ஒன்றை சமர்பித்தனர்..
ஆனந்திக்கு மேற்கத்தய நாடுகளின் அரச சார்பற்ற நிறுவனங்கள் எவ்வாறு ஊடகங்களில் தனது காணாமற் போன எல்ரிரிஈ உறுப்பினரான கணவன் தொடரபில் பேச அனுமதியளித்தன? காணமல் போன இவர் தான் கடைசி யுத்த நடவடிக்கைளின் போது பெற்றோர்களிடமிருந்து சிறுவர்களை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்குரியவர்.
இந்த அப்பாவியான தமிழ் மக்களை சந்திப்பதிலும் தங்கள் உனர்வுகளை பரிமாரிக் கொள்வதிலும் அமரிக்க தூதுவரான ஜே.ரெப் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றாரா? புலிகளால் கடத்தப்பட்ட தங்களது சிறுவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்று தெரியாமல் அவர்களை நீண்ட காலமாக ஏங்கித் தவிக்கின்றனர்.


உண்மையில் புலிகளின் தோல்வியின் பின்னர் தொகுக்கப்பட்ட அறிக்கைகள் எதுவும் எல்ரிரிஈ மற்றும் ததேகூ இன் குற்றங்களைப்பற்றி விவரிக்கவோ அல்லது கட்டாயப்படுத்தி தமிழ் சிறுவர்களை போராளிகளாக சேர்ப்பதற்க்கு மறைமுகமாக செயற்படட பிரதிநிதிகளை பற்றியோ கூறவே இல்லை.


காணாமற் போன ஆனந்தியின் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கணவன் சமபந்தமாக அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் சில நிறுவனங்கள் காட்டும் அக்கரை, காணாமற் போன 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் மேல் இல்லை இவர்களைப்பற்றி ஊடகங்களோ நிறுவனங்களோ பேசவில்லை. ஆனால் இலங்கையின் நடு நிலையான ஒரு ஆங்கில ஊடகம் புலிகளால் கட்டாயப்படுத்தி போராளிகளாக்கப்பட்ட தமிழ் மக்களின் அவல நிலைக்கு முக்கியத்துவம் வழங்கி பேசியுள்ளது மேலும் உன்மையில் வன்னி தமிழர்களை பற்றி யாழ் தமிழர்கள் தெரிந்திருக்கவுமில்லை கவலைப் படவுமிவில்லை காரணம் அரவர்கள் தாழ்ந்த இனத்தவர்கள் என்று நினைக்கின்றனர்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நற்பெயர் காணாமல் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைபின் கொடூரமான பக்கங்களை கண்டறிந்த மக்கள் இவற்றை விட்டு விலகி வாழ்கின்றனர், இவ்விரண்டு இயக்கங்களுக்கிடையிலான தொடர்பு தெளிவாக தெரிவதுடன் அது பாரிய விரிசல்களை வெளிக்கட்டுகின்றது தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஒரு பெயரில் உருவாக எண்ணுகின்றது
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களது துக்கத்தை வெளிக் காட்டுவதற்காக வேண்டி வெறுங் காலுடன் நடந்து வந்து ஊடகங்களை முன்னோக்கினார்கள் ஆனால் ஊடகங்களும் பக்கச்சார்பாக நடந்துகொண்டது அசாதாரணமாகும் ஜூன் மாதமும் ஊடகங்கள் அப்பாவி தமிழ் மக்களின் துயரத்தை வெளி உலகிற்க்கு காட்டாமல் பாரபடச்சமாக நடந்து கொண்டன அப்படியே திரும்பவும் செய்கின்றனர். ஊடகங்களினூடாக பல மில்லியன் பிரச்சாரங்கள் மேற் கொள்ளப்பட்டாலும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்களின் கதை மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகினறது.

சம்பந்தமான காணொளி


இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம் : ராமேஸ்வரம் மீனவர்கள் தயார்!

Wednesday, July 30, 2014
ராமேஸ்வரம் : இலங்கையில் தஞ்சம் புக அனுமதி கோரி, ஆக.,2 ல் கச்சத்தீவு செல்ல தயாராகி வரும் ராமேஸ்வரம் மீனவர்கள், விசைப்படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி உள்ளனர்.
 
இலங்கை மன்னார், காங்கேசன் துறைமுகம் கடற்கரையில் உள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 56 விசைப்படகுகள், அனுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள 43 மீனவர்களை விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் ஜூலை 24 முதல், காலவரையற்ற 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டுள்ளனர்.
 
இக்கோரிக்கைகளுக்காக, இலங் கையில் தஞ்சம் புக அனுமதி கோரி, ஆக.,2 ல் கச்சத்தீவு செல்வதற்கு, 300 படகுகளில் நேற்று வெள்ளைக்கொடி ஏற்றி, தயாராகி வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 50 தமிழக மீனவர்கள் கைது!

Wednesday, July 30, 2014
இலங்கை:இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 50 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
 
நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கரையோர பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் நாடு நாகை மாவட்டம் கோடி யக்கரை பகுதியிலிருந்து ஐந்து இழுவைப்படகுகள் மற்றும் 2 நாட்டுப் படகுகளுடன் வந்து நேற்றுக் காலை சுமார் 6.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
 
மீனவர்கள் 50 பேரும் மேலதிக விசாரணைக்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள துடன் படகுகள் காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Wednesday, July 30, 2014
சென்னை::இலங்கை கடற்படையால் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்கள் உட்பட 93 மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழகத்தில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்குவதும் பிறகு அவர்களை கைது செய்வதும் மீன்பிடி உடமைகளை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுபோன்ற அட்டூழியங்களை தடுக்க கட்சத்தீ வை மீட்பதுதான் நிரந்தர தீர்வு என்று கூறிவருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 50 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:-
 
5 இயந்திர படகுகளில் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 50 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ள சம்பவத்தை உங்களின் கவனத்திற்கு ஆழ்ந்த கவலையுடன் கொண்டுவரும் நோக்கத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 22-ம் தேதி நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் 9 படகுகளில் சென்ற 43 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு கைது செய்யப்பட்ட 43 மீனவர்களும் அவர்களது 9 படகுகளும் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. தங்களது அரசின் துரித நடவடிக்கையால் இதற்கு முன்பு 225 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இருப்பினும் 55 படகுகளை இலங்கை இன்னும் விடுவிக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர் சமுதாயம் கவலையில் மூழ்கியுள்ளது. எனவே இலங்கையின் வசம் உள்ள மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் ஒருமுறை உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை இலங்கை அரசு கைவிடுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது. மேலும் கட்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அதை மீட்பதே நிரந்தர தீர்வாகும். எனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சர்வதேச கடல் எல்லைக்கோடு நிர்ணயிப்பது ஒரு தீர்வு ஆகாது. 1974 மற்றும் 76 ஒப்பந்தங்களை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே கைது செய்யப்பட்ட 43 மீனவர்கள் உட்பட 93 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மீனவர்களின் 62 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

Tuesday, July 29, 2014

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் வைத்து கைது!

Tuesday, July 29, 2014      
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோவிலிருந்து டெக்ஸாஸ் நோக்கிப் பயணம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வயது வந்த ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெக்ஸாஸ் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்,

Monday, July 28, 2014

இந்தியாவிற்கு எதிராக சீனாவைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது: ரொஹான் குணரட்ன!

Monday, July 28, 2014
இந்தியாவிற்கு எதிராக சீனாவைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது என பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடான உறவுகள் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி, சீனாவுடன் சுமூகமான உறவுகளைப் பேணவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சம அளவிலான இடைவெளியை பேணும் வகையில்; வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் இந்தியாவை ஆத்திரமடையச் செய்யும் வகையில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா எதிர்க்கும் போதெல்லாம் சீனா உதவிக் கரம் நீட்டு;ம் என்பது சாத்தியமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, July 27, 2014

கரையோரப் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது!

Sunday, July 27, 2014
கரையோரப் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி பாரியளவில் போராட்டமொன்றை நடாத்த உள்ளதாக தமிழக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆயிரக் கணக்கான மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க உள்ளதாகவும், இலங்கையிடம் புகலிடம் கோர உள்ளதாகவும் எச்சரித்திருந்தனர்.

எனினும், கரையோரப் பாதுகாப்பு உச்சளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளா கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 24 மணித்தியாலங்களும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 

காதோடு காதாக......அனந்தியை காப்பாற்றிய பொலிஸாரும் படையினரும்!!

Sunday, July 27, 2014
* அனந்தியை காப்பாற்றிய பொலிஸாரும் படையினரும்
 
சனம் வளைத்துப் பிடிக்க தப்பித்தேன், பிழைத்தேன் என முல்லைத்தீவு வீதியில் அனந்தி ஓடிய ஓட்டத்தை மைதானத்தில் ஓடியிருந்தால் நிச்சயம் அவரை எவருமே வென்றிருக்க முடியாது. நெஞ்சை நிமிர்த்தி நின்று பதில் கூறியிருந்தால் அந்த அப்பாவி மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பர். ஏதோ பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு நின்ற படியால் காப்பாற்றி அனுப்பி வைத்துவிட்டனர். ஆமிக்காரனே வெளியேறு என இனியாவது கோஷமிடாது இருந்தால் சரி.
 
* அரச சுகபோகங்களை அனுபவிப்பது மு. கா. வா? தமிழ் கூட்டமைப்பா?
 
சுகபோகங்களுக்காக முஸ்லிம காங்கிரஸ் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறதாம். சொல்பவர் ஐயா சம்பந்தன் அவர்கள். மு. கா. சுகபோகத்தை அனுபவிக்குதோ இல்லையோ தெரியாது, அப்படியே அனுபவித்தாலும் அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அதில் தவறில்லை. ஆனால் ஐயாவும். ஐயாவின் கட்சி ஆட்களும் அரசிற்கு எதிராக நடந்து கொண்டே அரசின் சகல சுகபோகங்களையும் குறைவில்லாது அனுபவிக்கின்றனர். இல்லாவிட்டால் வடக்கு முதல்வருக்கு ஒன்றரைக் கோடியிலும், அமைச்சர்களுக்கு முக்கால் கோடியிலும் அதிசொகுசு வாகனங்கள். சொகுசு குடிமனைகள். பாதுகாப்பிற்கு பொலிஸார் எனக் கிடைக்குமோ? எம். பிமாருக்கு இதை விடவும் மேல் மற்றவர்களைப் பார்த்து அறிக்கை விடுவோர் தமது நிலையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
* என்னதான் இருந்தாலும் மனோவால்
தம்பிக்கு நிகராக முடியாது
 
மலையக மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழர் தேசிய பிரச்சினை தீர்வு பற்றிப் பேச முடியாது என யாழ்ப்பாணத்தில் ஈ. பி. ஆர். எல். எப். மேடையில் மனோ கணேசன் போட்ட குண்டு ரி. என். ஏ. காரருக்கு முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். அண்ணர் மனதில் எதையோ வைத்துக்கொண்டுதான் டீசல் அடித்து வந்து வடக்கு ஆர்ப்பாடங்களில் அக்கறையாக கலந்து கொள்கிறாரோ எனவும் தமக்குள் முணுமுணுத்தனராம், நாங்கள் பிரித்துப் பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க இவர் ஏன் இப்படித் திடீரென பிரித்துப் பேசுகிறார் என்றனராம். என்னதான் இருந்தாலும் மலையகத் தம்பி ஆறுமுகனின் அரசியல் முதிர்ச்சி இவருக்கு வரவே வராது என்ற முடிவிற்கு ரி. என். ஏ. காரர் வந்துவிட்டனராம். அதாவது அவர்களது பிரச்சினையைத் தீர்க்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது, நாம் எமது மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவோம் எனத் தம்பி தனது பேரன் போல் அண்மையில் கூறியிருந்தார்.

இந்தியாவை மலைபோல் நம்பிக்கொண்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சொந்த நாட்டுக்கு எதிர்ப் பிரசாரம் செய்து வரும் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம்!


Sunday, July 27, 2014
இலங்கை::இந்தியாவை மலைபோல் நம்பிக்கொண்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சொந்த நாட்டுக்கு எதிர்ப் பிரசாரம் செய்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிதாக ஆட்சி பீடமேறிய நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிர்ச்சி வைத்தியம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
 
கடந்த வாரம் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தலைமையில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஐவரடங்கிய குழுவினால் தெரிவிக்கப்பட்ட அந்நாடு தொடர்பான உண்மையான பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
 
டாக்டர் சுப்ரமணிய சுவாமி தலைமையில் டாக்டர் சேஷாத்ரி சாரி, டாக்டர் சுரேஷ் பிரபு, முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா, செல் தேசிய கன்வீனர் ஆகிய ஐந்து பேர், அடங்கிய இந்திய கொள்கை வகுப்பாளர்களால் மோடியின் கீழ் இந்தியா என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சி மருந்து வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கருத்தமர்வில் இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் அரசியலாளர்கள் மற்றும் பிரதானிகள் மத்தியில் உரை நிகழ்த்திய இக் குழுவினர், இந்தியாவின் கொள்கைகள் பற்றிய விளக்கத்தையும் இந்தியா பொருளாதார ரீதியாகவே அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் அண்டை நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் மிகுந்த நட்புடன் தொழிற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் இலங்கைக்கு எதிராக எந்தவொரு அரசியல் காய்நகர்த்தல்களையும் இந்தியா மேற்கொள்ள மாட்டாது என அவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
 
இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமை அமைப்பினால் கொண்டு வரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இந்தியா ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கையின் இன அழிப்பு என்ற சம்பவம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் கூட சுட்டிக் காட்டப்படவில்லை என்றும் அவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்தக் கருத்தமர்வில் கலந்துகொண்ட சுமந்திரன் மற்றும் சம்பந்தன் போன்றோருக்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்த இக் கருத்துக்கள் இடிபோல் இருந்திருக்கும் எனினும் அதுவே உண்மையான நிலைப்பாடாக அமைந்துள்ளது.
 
இந்த கொள்கை வகுப்பாளர்களால் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு தெரிவிக்கப்பட்ட விடயம் என்னவெனின் இந்தியா ஒருபோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பவில்லை என்பதே. மோடி அரசாங்கம் பதவியேற்ற பின் அப் பதவியேற்பு நிகழ்விற்கு கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் வடக்கின் முதலமைச்சரை அழைத்திருந்த போதும் அதற்கு வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
தமக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணமாக அவர் தெரிவித்திருந்தார். இவரது செயல் எவ்வாறு இருக்கிறது எனின் காயப்பட்டு கிடக்கும் ஒவர் தனது காயத்திற்கான மருந்து தன்னைத் தேடி வந்து போடப்பட வேண்டும் என்பது போலவே காணப்படு கின்றது.
 
தமிழ்த் தேசிய மூச்சில் இருப்பதாக வட., கிழக்கு மக்களுக்கு போலி வேசம் போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கும் கூட்டமைப்புக்கு இன்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்களால் பேதி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்வியை தழுவி வரும் புலி ஆதரவு தமிழ் தலைவர்களது எதிர்ப்பு அரசியல்!

Sunday, July 27, 2014
இலங்கை::இலங்கை அரசியல் வரலாற்றில் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்திலிருந்து இன்று வரை தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் நடத்திவரும் எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் தொடர்ச்சியான தோல்வியையே சந்தித்து வருகிறது. கடந்த அறுபத்தைந்து வருடங்களாக வெறுமனே எதிர்ப்பு அரசி யலை முன்னெடுத்து வருவதன் காரணமாக அவ்வப்போது இன முறுகலுக்கு முகங்கொடுப்பதுவும் அதனால் தமிழ்ச் சமூகம் பின்னடைவைக் காண்பது வுமே வரலாறாக அமைந்துள்ளது. இது அன்றைய அஹிம்சா வழி போராட் டம் முதல் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரை தொடர்ந்து இன்று தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் வரை தொடர் கதையாக உள்ளது.
 
தமிழ் அரசியல்வாதிகள் இனியும் இந்நிலையிலிருந்து மீளாதுவிட்டால் தமிழினத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும். இந்நாட்டை ஆட்சி செய்கின்ற அதிகாரத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மையின அரசாங்கங்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு தமது பிரதேசங்களையும், தாம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவதே இனிவரும் எதிர்காலத்தில் சரியானதொரு தெரிவான அமையும்.
 
இதுவரை எதிர்ப்பு அரசியலை நடத்தி வந்ததன் மூலமாக தமிழ் அரசியல் தலைமைகள் கண்ட வெற்றியோ அல்லது நிலைநாட்டிய சாதனையோ எதுவுமேயில்லை. விடுதலைப் புலிகளின் காலத்திற்கு முன்னரும் தமிழ் அரசியல்வாதிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்பு அரசியலை நடத்திவந்தனர். பின்னர் அப்பொறுப்பை புலிகளிடம் கையளித்தனர். அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது எதிர்ப்பைக் காட்டி வெற்றிகளைக் காணலாம் எனப் புறப்பட்டு இருந்ததையும் இல்லாமற் செய்தனர்.
 
இன்று அதே பழைய தமிழ் அரசியல்வாதிகள் சில புதிய முகங்களுடன் மீண்டும் தமது எதிர்ப்பு அரசியலை நடத்தி வருகின்றனர். தமது எதிர்ப்பு அரசியல் மூலமாக ஒரு தடவை மக்களை ஒருவித மாயைக்குள் தள்ளி வடமாகாண சபையை கைப்பற்றியுள்ளனரே தவிர கைப்பற்றிய அங்கு ஒரு நிர்வாகத்தை நடத்த முடியாது திக்குமுக்காடுகின்றனர். இதற்கு அவர்களது ஒத்துச் செல்லாத் தன்மையும் வரட்டு எதிர்ப்பு அரசியலுமே காரணமாக உள்ளன.
 
யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு கடந்த ஐந்து வருடங்களில் வட மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் வரையான நான்கு வருடங்களில் அரசாங்கம் அங்கு பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டது. இவர்களது தெரிவின் பின்னர் இப்போது அரசாங்கம் தேவையான அளவு நிதியை வழங்கினாலும் நிர்வாகத்தை நடத்த முடியாதுள்ளனர். அன்று அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியானதும் இவர்கள் இன்று நாடா வெட்டித் திறந்து வைக்கின்றனரே தவிர ஆட்சி பீடமேறி ஒரு வருடமாகியும் ஒருசிறு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.
 
அரசியல் தீர்வு பற்றிப் பேசி அதற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டே ஒரு வருடம் உருண்டோடி விட்டது. மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் அக்கறையில்லாதுவிடினும் தமக்கான ஆடம்பர வாகனங்கள், சொகுசு குடிமனைகள், அழகான அலுவலங்கள், உறவினர்களுக்கு உத்தியோகங்கள், தமக்குரிய பொலிஸ் பாதுகாப்பு என்பவற்றில் ஒருகுறையும் இல்லாது செம்மையாகவே செய்து வருகின்றனர். முதலமைச்சரை மக்கள் பார்வையிடுவது என்பது முடியாத காரியமாகவே உள்ளது. ஆர்ப்பாட்டங்களில் சந்திக்கலாம் என்றால் அவற்றில் முதலமைச்சர் பங்குபற்றுவதில்லை.
 
தமிழ்க் கூட்டமைப்பு இனியும் எதிர்ப்பு அரசியலை நடத்தாது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு ஒன்றினைக் கண்டு அதன் மூலமாகத் தமது மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். வடமாகாண ஆளுனரை மாற்றியே தீருவோம் என எதிர்ப்புக் காட்டி பல சூளுரைகளை தமிழ்க் கூட்டமைப்பு விடுத்து வந்தது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? அவரே அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆளுநராகப் பதவி வகிக்கப்போகிறார்.
 
இதனையே தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்கமாகப் பேசி நடந்திருந்தால் தமது கோரிக்கையில் வெற்றியைக் கண்டிருக்கலாம். இதுபோன்றே இன்று வடக்கில் இடம்பெறும் ஒவ்வொரு விடயமும் தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் எதிர்மாறாக நடந்து வருகிறது. ஒரு சிறு குறுநில மன்னர்கள் போல நடந்து கொண்டு அவர்கள் மத்திய அரசாங்கத்தை விரும்பியவாறு ஆட்டிப் படைக்கலாம் என நினைத்து வருகின்றனர்.
 
தமது இந்த செய்கைகளுக்கு சர்வதேசம் தொடர்ந்தும் கை கொடுக்கும் என்பது இவர்களது நினைப்பாக உள்ளது. ஆனால் பல உலக நாடுகள் இப்போதே இவர்களைக் கைவிட்டுள்ள நிலையே காணப்படுகிறது. யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு எத்தனையோ நாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தைக் காட்டிக் கொடுப்பது போன்று பொய்யுரைத்து வந்தது. ஆனால் அவை எவற்றாலும் எவ்விதமான பலனும் ஏற்படவில்லை. மாறாக உள்ளூரில் அரசாங்கத்திற்கு மக்களது ஆதரவு பெருகியதுடன் அரசாங்கம் சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது.
 
தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சித்து எதிர்ப்பு அரசியலை நடத்தி தமிழ் மக்களுக்கு எவ்விதமான விமோசனத்தையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பது இப்போது தெட்டத் தெளிவாகிவிட்டது. அரசாங்கம் தெற்கில் அந்தளவிற்கு வலுவான மக்கள் ஆதரவு பெற்றுக் காணப்படுகிறது. அரசாங்கத்தை எவரும் பயமுறுத்தி அல்லது அடிபணிய வைத்து தமது காரியத்தைச் செய்யலாம் என்பது இனிவரும் காலத்தில் இயலாததொரு விடயமாகிவிட்டது.
 
இந்நிலையில் இனியும் எதிர்ப்பு அரசியலால் தமது மக்களுக்கு சேவை செய்யலாம் எனும் மாயையிலிருந்து தமிழ்த் தலைமைகள் விடுபட வேண்டும். குறிப்பாக தமிழ்மக்களின் ஓரளவு ஆதரவைப் பெற்று வட மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலமாக தமது மக்களுக்குச் சேவை செய்ய முன்வர வேண்டும். அரசாங்கமும் பேச்சு நடத்தத் தாமும் தயார் என்ற அறிவிப்பை தமிழ்க் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இனியும் எதிர்ப்பு அரசியலை நடத்தினால் தமிழ்க் கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக் குறியாகிவிடும். தமிழ் மக்கள் அந்தளவிற்கு வெறுப்படைந்துள்ளார்கள் என்பதே உண்மை. எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்கள் வாழ்விலும், தமிழ் அரசியலிலும் தொடர் தோல்விகளையே தந்துள்ளது என்ற உண்மையை தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

Thursday, July 24, 2014

மட்டக்களப்பு என்னும்போது அந்த பெருமையில் நாங்களும் பங்குகொள்கிறோம்: ஏ.எல்.எம்.அதாவுல்லா!

அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவனாக இருந்தாலும் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு என்னும்போது அந்த பெருமையில் நாங்களும் பங்குகொள்கிறோம் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையின் விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவி;த்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாங்கள் என்ன எண்ணத்துடன் செயற்படுகின்றோமோ அந்த எண்ணமே எமக்கு வாழ்வாக மாறும்.ஒவ்வொரு விடயத்தினையும் ஆரம்பிக்கும்போது எண்ணம் பிரதானமாக கருதப்படும்.எண்ணங்கள் உயர்வாக இருக்கும்போது அந்த எண்ணங்கள் நிறைவேறும்.அதனையே இந்த உள்ளுராட்சி சபையின் நடவடிக்கைகளில் நான் பார்க்கிறேன்.

கிழக்கு மாகாணத்தின் கேந்திரஸ்தானமாகவும் தலைநகரமாகவும் மட்டக்களப்பு உள்ளது.முதலாவது மாநகரசபையும் கூட.இந்த மாகாணத்தில் முன்மாதியாகவும் இருந்துவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஒன்று.நமக்கு மத்தியில் எந்த திரையும் இல்லை.நாங்கள் எதிலும் மாற்றம்பெறவில்லை.உணவு தொடக்கம் அனைத்திலுமே நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

அதனால் நான் கிழக்கு மாகாணம் தனித்திருக்கவேண்டும் என்று கூறினேன்.என்னை அந்த காலத்தில் தமிழர்களின் விரோதியாக சித்தரித்திருந்தனர்.

ஆனால் இன்று நான் பெருமிதம் அடைகின்றேன்.வடமாகாணத்தில் இருக்கின்ற அரசியல் தலைமைகள் கூட வடக்கும் கிழக்கும் இணைவது சாத்தியமில்லையென தெரிவித்திருக்கின்றனர்.இது எண்ணத்தில் இருக்கின்ற பிரச்சினை.நாங்களும் பிரியச்சொன்னது எண்ணத்தில் இருந்த பிரச்சினை.
இந்த மண்ணில் ஒன்றாக வாழ்ந்தவர்கள் ஒன்றாகவாழவேண்டும் என்ற எண்ணமே உள்ளது.எங்களுக்கு இங்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.யாரும் வந்து ஆளப்படும் சமூகமாக கிழக்கு மாகாண மக்கள் இருக்கதேவையில்லை.

நான் என்ன எண்ணம் கொண்டு நடந்தேனோ இது நடந்துகொண்டுசெல்கின்றது.அந்த எண்ணத்தினைக்கொண்டே சந்திரகாந்தன் அவர்களை முதலமைச்சராக்குவதற்கு ஒப்புதல்வழங்கினேன்.

அன்று தமிழர்களுக்கு துரோகியாக துரையப்பா இருந்ததாக சொன்னது போன்று முஸ்லிம்களுக்கு துரோகியாக என்னை காட்டினார்கள்.அவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களோ முஸ்லிம்களோ ஆளமுடியும் என்ற யாதார்த்தத்தினை புரிந்துகொள்ளமறுத்துவிட்டனர்.

30ஆண்டுகளுக்கு முன்பிருந்தவற்றையும் அதன் பின்னர் இருந்தவற்றையும் கற்றுக்கொண்டவர்கள் நாங்கள்.இரு சூழலையும் நன்னு அனுபவித்தவர்கள் நாங்கள்.எமது அடுத்த சந்ததிக்கு எது சரியான வழியென்பதை சொல்லிக்கொடுப்பதற்கு எங்களைத்தவிர யாரும் இருக்கமுடியாது.

சிலவேளைகளில் போராட்டங்கள் தேவைதான்.போராட்டங்கள் வெற்றியளித்தும் உள்ளன.பல உலக தலைவர்களின் போராட்டங்கள் வெற்றியளித்துள்ளன.எண்ணத்தில் தூய்மை இருந்த காரணத்தினால் அவை வெற்றியளித்துள்ளது.ஆனால் நாங்கள் இந்த நாட்டிலே கண்டது எல்லாம் போராட்டம் என்ற பெயரில் சுயநல ரீதியான நடவடிக்கைகள்தான் நடத்தப்பட்டன.இல்லையென்றால் அந்த போராட்டம் தோற்றிருக்காது.

எந்தசமூகமும் எந்த பிராந்தியமும் எந்த குடும்பமும் தாங்கள் விடுதலையாவதற்கு,தாங்கள் வாழ்வதற்கு தங்களுக்கான சுய உரிமையை பெற்றுக்கொள்வதற்கு இதயசுத்தியான எண்ணங்களுடன் போராடுவதற்கு முன்வரும்போதே அந்த போராட்டம் சாத்தியமாகும்.இல்லையென்றால் அது தோற்றுப்போகும்.

நாங்கள் இன்று சந்தோசமாகவுள்ளோம்.அதேபோன்று எமது அடுத்த சந்திதியனரும் சந்தோகசமாக இருக்கவேண்டும்.வெறுமனே போராட்டம்,போராட்டம் என்று மீண்டும் மீண்டும் எம்மை தாக்குபவர்களாக நாங்கள் இருக்கமுடியாது.

நான் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும்போது அந்த கட்சிக்கும் தேசிய காங்கிரஸ் என்றே பெயர் சூட்டினேன்.அங்கு தமிழ் முஸ்லிம் என்ற பேச்சுக்கு இடமில்லை.எனது முழு நோக்கமும் கிழக்கு மாகாணத்தினை மையமாகக்கொண்டதாகும்.கிழக்கு மாகாணத்தில் மூன்று சமூகங்களும் வாழ்கின்றோம்.மூன்று சமூகமும் ஒன்றுபட்டுவாழவேண்டும்.

தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்து முஸ்லிம்கள் நிம்மதியாக வாழவில்லையென்றால் அங்கு அமைதி வரப்போவதில்லை.முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து தமிழர்கள் நிம்மதியாக வாழவில்லையென்றாலும் அங்கு அமைதிவரப்போவதில்லை.இரண்டு சமூகமும் நிம்மதியாக வாழ்ந்து சிங்களவர்கள் அமைதியாகவில்லையென்றால் நாங்கள் அமைதியாக இருக்கமுடியாது.அவ்வாறான பிணைப்பில் நாங்கள் உள்ளோம்.

இந்த நிலையில் நாங்கள் உள்ளத்தளவில் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுகொள்ளவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன்.ஒன்றாக அரசியல்செய்வதை பற்றி சிந்திங்கள் என்று.

கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிந்துபோயுள்ளதாக ஒருவெளிப்பாடு காட்டப்பட்டுள்ளது.அவ்வாறு நாங்கள் பிரியமுடியாது.அடித்தாலும் வெட்டினாலும் பிரிந்துவாழமுடியாது.அதுயாதார்த்தம் அல்ல.

எங்களுக்குள் இருக்கும் சிறியசிறிய பிரச்சினைகள் அல்லது பிரச்சினைகளாக காட்டப்படுபவைகளை பிரச்சினை உருவாவதற்கு காரணமாக இருக்கும் விடயங்களை தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் எம்மிடம் உள்ளது.

நான் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவனாக இருந்தாலும் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு என்னும்போது அந்த பெருமையில் நாங்களும் பங்குகொள்கிறோம்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பே தலை நகரமாக இருக்கவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதால் அனைவருக்கும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இலகுவாக இருக்கும்.இந்த மாநகரசபைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நான் தயாரகவுள்ளேன்.

கிழக்கு மாகாணத்தில் அழகுபொருந்திய மாவட்டமாகவும் மக்கள் சந்தோசமாக வாழும் பிரதேசமாகவும் இந்த மட்டக்களப்பு உள்ளது.

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும்: மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம!

Thursday, July 24, 2014
இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
 
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையானது யுத்த காலத்தில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதனை விசாரிக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
எமது குழு ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் விசாரணையை விட சுயாதீனமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணையை எமது நாட்டில் உள்ளக ரீதியில் நடத்தி அறிக்கையை வெளியிடும். இது விரிவுபட்டதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இது நேருக்கு நேர் விசாரணையாகும். எனவே எமது உள்ளக விசாரணை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமையும். இந்த விசாரணை செயற்பாட்டில் புலம் பெயர்ந்தவர்களும் சாட்சியங்களை அளிக்கலாம்.
 
மேலும், யாருக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றதோ அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
புதிய ஆணைக்கு அமைவாக சர்வதேச தரத்துக்குட்பட்ட வகையில் விசாரணைகளை நடத்துவதற்காக ஆலோசனை வழங்கவே சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களை எமது விசாரணை அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு நாங்கள் அழைக்கவுள்ளோம் என்றும் பரணகம கூறினார்.

பிரித்தானியா புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை: உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலிக்கான அழைப்பை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!

Thursday, July 24, 2014
கிளாஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்துகொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்க மறுத்துள்ளார்.
 
புலிகள் சார்பு குழுக்கள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என அதிகாரிகள் கூறியதை காரணமாக காட்டி ஜனாதிபதி இந்த அழைப்பை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலாசார ஊடகங்கள் மற்றும் விளையாட்டுக்கான இராஜாங்க செயலாளர் சஜிட் ஜாவிட்டிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம்;  விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ஆம் திகதி கிடைத்ததாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
 
ஜனாதிபதி முன்னர் பிரித்தானியா சென்றபோது  புலிகள் சார்பு புலம் பெயர்ந்தோர் குழுக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, எதிர்ப்பாளர்கள் போத்தல்களையும் வெற்று தகர பேணிகளையும், ஜனாதிபதி பயணித்த கார் உட்பட வாகனத்தொடர்மீது எறிந்தனர்.
 
புலிகள் இயக்கம் பிரித்தானியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.
 
இந்த கடிதத்தில், இச் சம்பவத்தின்போது சட்ட அமுலாக்க அதிகாரிகள் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்ததையிட்டு அரசாங்கம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது என தெரியவருகிறது.
 
எலிசபெத் மகாராணியின் வைரவிழா கொண்டாடப்பட்டதுக்காக, ஜூன் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி லண்டன் சென்றபோது பிரதான நிகழ்வின்போது இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை என அரசாங்கம் கூறுகிறது.

சீனாவின் உதவியுடன் அமையவுள்ள விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள்: ருவாண் வணிகசூர்ய!

Thursday, July 24, 2014
இலங்கை::இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூர்ய இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சீனாவின் உதவியுடன் அமையவுள்ள  விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையால் பயன்படுத்தப்படும் சீனா தயாரிப்பு விமானங்களின் பராமரிப்பிற்காகவே சீனா உதவியுடன் இதனை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது குறிப்பிட்ட சீனா விமானங்களை பாக்கிஸ்தானிற்கு பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு ஜப்பானின் உதவியுடன் அவ்வாறான பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
விமானப் பராமரிப்பு நிலையத்தின் பணிகள் இலங்கையர்களினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

சீன உதவியுடன் விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச விமான பராமரிப்பு நிலையத்தின் சகல பணிகளையும் இலங்கையர்களே மேற்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை படையினருக்கு சொந்தமான சீன உற்பத்தி விமானங்களை பராமரிப்பதே இந்த விமான பராமரிப்பு நிலையத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானப் பராமரிப்பு பணிகள் தற்போது பாகிஸ்தானினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தையும் சீனா அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதன் மூலம் பாரியளவிலான பணத்தை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Wednesday, July 23, 2014

இலங்கை கடற்படை சிறைபிடித்த 43 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்!

Wednesday, July 23, 2014
சென்னை::பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 21ம் தேதி ஜகதாபட்டினம் மற்றும் கோட்டைபட்டினம் ஆகிய பகுதியில் இருந்து 5 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. அவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் அதே 21ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களையும் அவர்களது 4 படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 16ம் தேதி புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அரசு எடுத்து வரும் தொடர் முயற்சியால் இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த 225 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது 46 படகுகள் தொடர்ந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் சட்டவிரோதமாக இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு மீட்கபட வேண்டும் என்று தமிழக அரசு கோரி வருகிறது.     மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு தங்களுக்கு எழுதிய கடிதத்தில் எனது பரிந்துரைகளையும் விளக்கி குறிப்பிட்டிருந்தேன். இந்த சூழலில் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள 43 மீனவர்கள் மற்றும் அவர்களது 55 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது தாக்குதல் நடாத்த இலங்கை களமாகப் பயன்படுத்தப்படாது: அரசாங்கம்!

Wednesday, July 23, 2014
இலங்கை::இந்தியா மீது தாக்குதல் நடாத்த இலங்கை களமாகப் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.

உலகின் எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடாத்த குறிப்பாக இந்தியா மீது தாக்குதல் நடாத்த, திருகோணமலை பயன்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது என வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஐந்து பில்லியன் ரூபா செலவிட்டு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க தி;ட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்த இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் சீனாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த இடத்தில் விமான நிலையமொன்றை அமைப்பது குறித்த தீர்மானங்கள் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க, மத்தள மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் விமான பராமரி;ப்பு நிலையமொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், விமான பராமரிப்பு நிலையம் அமைப்பது இந்தியாவிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சீன நிறுவனத்தினால் இலங்கையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள விமான பராமரிப்பு நிலையம் குறித்து, இ;ந்தியா கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தம்மிடம் இது குறித்து வினவியதாகவும், எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது: சுப்பிரமணிய சுவாமி!

Wednesday, July 23, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணிய சுவாமி தலைமையிலான இந்திய தூதுக்குழு உறுப்பினர்கள் இன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினர.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில்  (22) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றி ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இந்தியத் தூதுக்குழுவினரு பாதுகாப்பு அமைச்சன் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

விவசாய நிலங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வெருளிகள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் இலங்கை குறித்து ஏன்  அவர்கள் அக்கறை கொள்ளவேண்டும் அவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இது குறித்த கவலையடைய தேவையில்லை, நாங்கள் ஒரு போதும் சர்வதேச விசாரணைணை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்து அரசாங்கம் கவலை கொள்ள வேண்டியதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இலங்கை தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் விசாரணைக்குழுவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அனுமதியுடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்ஙகை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு சீனா எதிர்ப்பை வெளியிடும் எனவும் அதனால் இலங்கை கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் தலையீடுகளை நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 22, 2014

அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்பு!

Tuesday, July 22, 2014
சென்னை: அதிமுக சார்பில் புனித ரம்ஜான் நோன்பு இப்தார் திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். விருந்துக்கு வந்தவர்களை எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் வரவேற்றார்.
 
அமைச்சர் அப்துல் ரஹீம் வாழ்த்துரை வழங்கினார். இதில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:இஸ்லாம் மார்க்கம் என்பது நல்வழி மார்க்கம். ஒற்றுமையுடன் இருப்பது, நல்ல காரியங்கள் செய்வது, தர்மம் செய்வது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, மதபேதம் பாராமல் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வதை வலியுறுத்துகிறது. கோபத்தை அடக்குவது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம். அவர் நற்பண்புகளை மட்டும் போதிக்காமல், தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர்.
 
நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். அவரது போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்திய நாடு அமைதி பூங்காவாக விளங்கும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார். அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி. நன்றி கூறினார்.

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்தனர்!

Tuesday, July 22, 2014
உக்ரைனில் 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத் தின் கருப்பு பெட்டிகளை மலேசிய அதிகாரிகளிடம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்தனர்.நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவின் கோலாம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 17ம் தேதி உக்ரைன் வான்வெளியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த 150 பயணிகள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை தாக்கியதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டி வருகிறது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களோ, இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசு தான் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

உக்ரைன் கிழக்கு பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் இடத்தில் இருந்து பயணிகள் உடல்களை மீட்கவும், தடயங்களை சேகரிக்கவும் கிளர்ச்சியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையில், விமான தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆஸ்திரேலியா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில், ‘ஆஸ்திரேலியாவை சேர்ந்த குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே இதுகுறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விட வேண்டும்‘ என்று கோரியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச குழுவினர் சுதந்திரமாக ஆய்வு செய்ய கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும் என 15 பேர் அடங்கிய ஐநா உயர்மட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மீட்கப்பட்ட 282 உடல்களை குளிர்பதன ரயில் மூலமாக டோரஸ் ரயில் நிலையத்தில் இருந்து டோன்ஸ்க் நகருக்கு கிளர்ச்சியாளர்கள் கொண்டு சென்றனர். அவர்கள் சம்மதத்தின் பேரில், நெதர்லாந்து நிபுணர்கள் உடல்களை பரிசோதனை செய்தனர். இந்த உடல்கள் ரயில் மூலமாக உக்ரைன் அரசு வசம் உள்ள கிர்கிவ் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு நெதர்லாந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கிடையில்,  வீழ்த்தப்பட்ட விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளையும் கிளர்ச்சியாளர்கள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். டோன்ஸ்க் நகரில் இன்று காலை மலேசிய குழுவினரிடம் பெட்டிகளை ஒப்படைத்தனர்.  அந்த பெட்டிகள் நல்ல நிலையில் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் கூறுகையில், ‘கருப்பு பெட்டிகளை ஒப்படைத்ததன் மூலம், விமான தாக்குதலில் கிளர்ச்சியாளர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கொள்கிறோம். தாக்குதலுக்கு உக்ரைன் அரசே முழுக்க முழுக்க காரணம்‘ என்றார். விமானத்தின் கருப்பு பெட்டி மூலம் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் விசாரணை சூடுபிடித்துள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 38 மீனவர்கள் சிறைபிடிப்பு: 9 விசைப்படகுகள் பறிமுதல்!

Tuesday, July 22, 2014
ராமேஸ்வரம்::பாக்ஜலசந்தி அருகே கடலில் நேற்றிரவு மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். 9 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கடலில் நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மீனவர்கள் தினகரன், ஜெபமாலை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு படகுகள் உட்பட 4 மீன்பிடி படகுகளை சிறைபிடித்தனர்.
 
மேலும், படகுகளில் இருந்த மீனவர்கள் ரொமிரோ, அருள்ராஜ், கொச்சேரியன், நம்புபிச்சை, பாலசுந்தரம், வெலிஸ்டன், மெல்டன், கிறிஸ்துராஜ், அலங்காரம், ரீகன், மணி உள்ளிட்ட 20 பேரையும் சிறைப்பிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இதேபோல், புதுகை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து 239 படகுகளில் சுமார் 900 மீனவர்களும், ஜெகதாபட்டினத்திலிருந்து 235 படகுகளில் சுமார் 850 மீனவர்களும் கடந்த 20ம் தேதி மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று மதியம் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது.
 
கோட்டைபட்டினத்தை சேர்ந்த செயிபு என்பவரது படகில் சென்ற வினோத்(22), மாரியப்பன்(28), முருகேசன்(35), ஆரோக்கியதாஸ் என்பவரது படகில் சென்ற சுப்பையா(45), அடைக்கலம்(55), மணி(40), சித்திரவேலு(40), பாக்கியம் என்பவரது படகில் சென்ற விஜி(38), சதீஷ்(30), நடராஜ்(55), ராஜேஷ்(35), ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் படகில் சென்ற மகேந்திரன்(30), பாரதி(24), கோவிந்தன்(56) மற்றும் மேலும் ஒரு படகில் இருந்த 4 பேர் என 18 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களது 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேரிடமும் இலங்கை தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பிடிபட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையே, படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பதற்றம் நிலவுகிறது.ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட 46 படகுகளுடன் நேற்று இரவில் பிடிபட்ட 9 படகுகளையும் சேர்த்து மொத்தம் 54 மீன்பிடி விசைப்படகுகள் இலங்கை கடற்படையினர் வசம் உள்ளன. சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.