Thursday, November 29, 2012

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டு கொலை!

Thursday, November 29, 2012
ஜெய்சால்மர்::இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் ராஜஸ் தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இந்தோ பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்கு எல்லை பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்புக்காக ஆங்காங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகங்காநகர் ஏரியாவில் கண்காணிப்பு கோபுரம் நம்பர் 303 உள்ளது. இந்த கோபுரத்தில் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு பாகிஸ்தான் பகுதியிலிருந்து 2 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வதை பார்த்தனர்.

உடனடியாக அவர்களை திரும்பி போகுமாறு வீரர்கள் எச்சரித்தனர். இதை மீறி அவர்கள் இந்திய பகுதிக்குள் வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து சரிந்தார். மற்றொருவர் இருளை பயன்படுத்தி ஓடி மறைந்தார். குண்டு காயமடைந்தவரை வீரர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. தப்பியோடிய நபரை பிடிக்க நாலாபக்கமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது புதர் ஒன்றில் மறைந்திருந்த அந்த நபர் உயிருடன் பிடிக்கப்பட்டார். விசாரணையில் அவர் பாகிஸ்தானின் பவல்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்!

Thursday, November 29, 2012
இலங்கை::இலங்கையில் தமது பணியினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலுாஜ் இன்று கைத்தொழில், வணிகத் துறை  அமைசச்ர றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் தாம் பணியாற்றும் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்ததாகவும், மக்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர்களது தேவைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் உயர் ஸ்தானிகர் அமைச்சரிடத்தில் எடுத்துரைத்தார்.

குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் வரிசையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிகள் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதாகவும், மக்களுக்கு பணியாற்றும் விதம் தம்மை பெரிதும் கவர்ந்ததாகவும் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலுாஜ் அமைச்சரிடத்தில் குறிப்பிட்டார்.
இலங்கை -பாகிஸ்தான் இரு தரப்பு வர்த்தகம் மிகவும் நெருக்கமாகவுள்ளதால் ஆடைத் தொழிற் துறை, மாணிக்கற்களைக் கொண்டு நவீன வடிவமைப்பு செய்யும் தொழில் நுட்பம் குறித்தும் தமது நாடு இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாகவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் கூறினார்.

இலங்கையின் யுத்த காலத்தில் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைழைப்புக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், உயர் ஸ்தானிகர் இலங்கையில்  ஆற்றிய பணிகள் மிகவும் சிலாகிப்புக்குள்ளானது என்றும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை தேவைப்பாடுகள் என்பனவற்றை தொடர்ந்து பெற்றுக் கொடுக்கும் திட்டங்களை பாகிஸ்தான் முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் உயர் ஸ்தானிகர் இடத்தில் கேட்டுக் கொண்டார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை அடுத்த வருடம் நடுப்பகுதியிலிருந்து இயக்குவதற்கு துரித நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை!

Thursday, November 29, 2012
இலங்கை::அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை அடுத்த வருடம் நடுப்பகுதியிலிருந்து இயக்குவதற்கு துரித நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்தவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலின்போதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்போது கடந்த கால யுத்தத்தால் முற்றாக அழிவடைந்த அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்திய அரசின் நிதியுதவியுடன் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்ற வருகின்றன.

இதன்பிரகாரம் உட்கட்டுமான ஆரம்பக்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய புனரமைப்புப் பணிகளை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து யூன் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தி கைத்தொழில் பேட்டையை விரைவில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறாக அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை புனரமைக்கப்பட்டு இயங்கும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.;ஜெகராஜசிங்கம், இந்திய உயர்ஸ்தானிகராலய பொருளாதாரத்துக்கான பேரவை உறுப்பினர்கள் யு.என்.ஒ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள், திறைசேரியின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு: யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் மகஜர் கையளிப்பு!

Thursday, November 29, 2012
இலங்கை::இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்துவதற்கு விரைவான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை உள்ளிட்ட மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் பேரணியை நடாத்தி இம் மகஜரை கையளித்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கான கோரிக்கை மனுவினை ஏற்றுக்கொண்ட ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அங்கு உரையாற்றும் போது எமது கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை சுதந்திரமாகவும், இயல்பாகவும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமே எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். அந்தவகையில் எமது பகுதிகளில் அத்துமீறியதும், தடைசெய்யப்பட்டதுமான இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களது தொழில்நடவடிக்கைகளால் எமது பகுதி கடற்றொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடாக இவ் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் இதற்கு சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வெண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினது மகஜரினை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை  ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரிடம் கையளித்தார்.

இதில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் உடனிருந்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கிய ஆவணங்களின் பிரதிகளை வழங்குமாறு அறிவிப்பு!

Thursday, November 29, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதிகளை அவருக்கு வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சிசிர டி ஆப்ரூ மற்றும் சுனில் ராஜபக்ஸ ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு மன்னிப்பு வழங்கியமை தொடர்பான ஆவணங்கள் வழக்கிற்கு முக்கியத்துவம் வாயந்தவையாக இருப்பதால் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அந்த ஆவணங்கள் வழங்கப்படவில்லை என இதன்போது மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகிய சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் : ஜெயலலிதா பெங்களூரு புறப்பட்டார்!

Thursday, November 29, 2012
சென்னை::காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய காவிரி ஆணைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் கர்நாடக அரசு பிரதமரின் உத்தரவை முழுமையாக அமுல்படுத்தவில்லை. குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட்டு அதன்பிறகு அணையை மூடிவிட்டனர்.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்- அமைச்சர்களும் சந்தித்து பேசி தீர்வுகாணவேண்டும் என்ற ஆலோசனையை வழங்கி, வழக்கை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து பெங்களூர் சென்று கர்நாடக முதல்- மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் சந்தித்து பேசுகிறார்.
இதற்காக இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் நேற்றிரவே பெங்களூர் சென்றுள்ளனர்.
1-11-12_findyour_INNER_468x60.gif

இந்திய றோலர் மீன்பிடிப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்திய துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்!

Thursday, November 29, 2012
இலங்கை::இந்திய றோலர் மீன்பிடிப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்திய துணைத் தூதரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய தூதுவரை வெளியே வருமாறு கடற்றொழிலாளர்கள் கூக்குரலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய றோலர்களை கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டமாக வந்த கடற்றொழிலாளர்கள் மகஜர் ஒன்றை தூதுவருக்கு சமர்ப்பிக்க முயன்றனர். இதன்போது 5 பிரதிநிதிகளை மட்டும் தூதரகத்தின் உள்ளே அழைத்து இம்மகஜரைப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து இந்தியா ஒழிக, அடிக்காதே அடிக்காதே இலங்கை மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே, நிறுத்து நிறுத்து றோலரை நிறுத்து உள்ளிட்ட வாசகங்களையும் இவர்கள் ஏந்தியிருந்ததோடு சத்தமாகவும் கூக்கூரலிட்டனர்.

 இதனைத் தொடர்ந்த அவர்கள் யாழ்.அரச அதிபரிடம் சென்று மகஜர் ஒன்றைக் கையளிக்கச் சென்றனர்.

இலங்கையில் மனிதாபிமானப் பண்புகள் நிறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது - இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் மிச்சேல் சிசன்!

Thursday, November 29, 2012
இலங்கை::இலங்கையில் மனிதாபிமானப் பண்புகள் நிறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதென இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் மிச்சேல் சிசன் தெரிவித்தார்.

கண்டியில் இயங்கும் ஆறு இளைஞர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கண்டி முஸ்லிம் இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அநாதரவு மற்றும் விஷேட உதவிகள் தேவைப்படும் சிறுவர்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் மேலும் கூறுகையில்,

நான் ஒரு இராஜதந்திரியாக முப்பது வருடங்கள் சேவை புரிந்துள்ளேன். எனது சேவைக்காலத்தில் கிறிஸ்தவ இளைஞர் சங்கம், முஸ்லிம் இளைஞர் சங்கம், பௌத்த இளைஞர் சங்கம், இந்து இளைஞர் சங்கம் எனக்கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் இந்த ஆறு இளைஞர் அமைப்பு பற்றி இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்றுதான் நான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். எனவே, சிக்ஸ் வைய்ஸ் (6 Y’s) என்ற இவ்வமைப்பு தொடர்பாக எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேவேளை, கடந்த 30 வருடகால யுத்தத்தை சந்தித்த உங்களில் இன்னும் மனிதாபிமானம் இருப்பதைக்கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேனெனத் தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் கண்டி நகர பிதா மற்றும் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் தலைவர் ஆகியோர் உரையாற்றியதுடன் அமெரிக்கத் தூதுவர் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கினார்.

13ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது - தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Thursday, November 29, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் ஒரு சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த போதிலும், அதனை அரசாங்கத்தின் நிலைப்படாகாகக் கருதப்பட முடியாது தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் நாட்டின் அரசியல் சாசனத்தில் 13ம் திருத்தச் சட்டம் இணைத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தோர் குறித்து தமிழகத்தில் விசாரணை!

Thursday, November 29, 2012
சென்னை::புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தோர் குறித்து தமிழகத்தில் விசாரணை!
புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பில் தமிழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல பாகங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
புலி செயற்பாடுகள் மீள தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என தமிழகத்தின் கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தின நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புலிகளுக்கு ஆதரவளித்து வரும் முக்கியமான நபர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாவீரர் தின பிரச்சார நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது!

Thursday, November 29, 2012
இலங்கை::யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும்  புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி ஆகிய விடுதிகளில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ருந்த புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினர் குறித்த விடுதிகளை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் புலிகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் நபர்கள் இராணுவ விசாரணைகளை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
அங்கு நடந்த சகல சம்பவங்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள கணனி மூலம் புலிகளின் அணியொன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் திவயின கூறியுள்ளது. 

தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்படும் - லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

Thursday, November 29, 2012
இலங்கை::தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென பிரதி பொருளாதார அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 13 வது திருத்தத்தினூடாக எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத போதும் அதனை ஒரேயடியாக ரத்துச் செய்ய முடியாது. முதலில் அதற்கு மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக வியலாளர் மாநாட்டில் 13 ஆவது திரு த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இங்கு உரையாற்றிய அவர், 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் உள்ள சில கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அது அவர்களது கருத்தே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. 13 ஆவது திருத்தத்தை அகற்றுவதனால் அதற்கு சகல தரப்பினரதும் இணக்கம் பெறப்படவேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தத்தை ஒரேயடியாக மாற்ற முடியாது. முதலில் அதற்கு மாற்aடாக வேறு தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் வகையில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கிய பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும். 13 ஆவது திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கோ ஏனைய மக்களுக்கோ எதிர்பார்த்த தீர்வுக்கிடைக்கவில்லை. இருந்தாலும் அதனை இரத்து செய்வதற்கு முன்னர் வேறு தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் பொதுவான முடிவு எதுவும் எட்டவில்லை. இது குறித்து சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்சிகளினதும் தனிப்பட்ட கருத்துகளே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பொய்பிரசாரங்கள் செய்து வருகின்றன. இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ் கட்சிகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். தெரிவுக்குழுவுக்கு வராமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஊடாக தம்மை வளர்த்துக்கொள்வதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பொறுப்புடன் செயற்படவேண்டும். வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. மீள்குடியேற்ற நடவடிக்கையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக ஏனைய மாவட்டங்களை விட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் கலந்துகொள்ள முன்வரவேண்டும் என்றார். திவிநெகும சட்டமூலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கும் திவிநெகும தொடர்பான தீர்ப்பிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. நீதிமன்ற உத்தரவை மதித்து நாம் திவிநெகும தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை முழுமையாக அமுல்படுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படியே சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெறப்பட்டது. திவிநெகும சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்து. அதன் படி குறித்த பிரிவுகளை அகற்றி ஏனைய பிரிவுகள் மாத்திரம் அமுல்படுத்தப்படும் என்றார்.

இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் முன்வைத்த மைக்கல் கிரிம் மீது மோசடி குற்றச்சாட்டு!

Thursday, November 29, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் முன்வைத்த மைக்கல் கிரிம் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை முன்வைப்பதற்காக அவர் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றிடம் இருந்து நிதியை பெற்றுக் கொண்டதாகவும், போலியான தகவல்களை வழங்கி இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக த ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணை அவரால் அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்காக அவருக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை ஒத்திவைக்குமாறு, அமெரிக்காவின் நீதித்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை குறித்து விசாரணை குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

Wednesday, November 28, 2012

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசாங்கத்தினால் சகித்துக்கொள்ள முடியா நிலை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க!

Wednesday, November 28, 2012
இலங்கை::தமது விருப்பு வெறுப்புகளின் பிரகாரம் நீதிமன்றம் செயற்பட வேண்டுமென அரசாங்கமொன்று எண்ணுவது ஜனநாயகத்திற்கும் மக்கள் இறைமைக்கும் விடுக்கப்படவுள்ள பாரதூரமான அச்சுறுத்தலுக்கான அறிகுறியாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை உள்ளிட்ட, கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களினால் நீதித்துறைக்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக 'ஜனநாயகம்-அரசாங்கம்-நீதிமன்றம்' என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையிலுள்ள சகிப்புத்தன்மையற்ற அரசியல் சூழலில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசாங்கத்தினால் சகித்துக்கொள்ள முடியாதநிலை தோன்றியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தொழிலில் இருந்து நீக்கப்படுகின்ற ஊழியர் ஒருவர் தனக்கு நியாயம் பெற்றுக்கொள்வதற்காக நாடக்கூடிய பல்வேறு இடங்கள் காணப்படுகின்றபோதிலும் ஜே.ஆர்.ஜயவர்தன அரசியலமைப்பின் பிரகாரம் உயர்நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியாயம் கோரி செல்லக்கூடிய இடமொன்று காணப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவரேனும் நீதியரசர் ஒருவருக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதனை பாராளுமன்றத்திற்கு வெளியில் நீதிமன்றக் கட்டமைப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்துவது உகந்தது என்ற யோசனையை 200ஆம் ஆண்டு தாம் திருத்தமாக முன்வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்படுவதே சிறந்தது என தாம் யோசனை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பொலிஸார் கடமையில்!

Wednesday, November 28, 2012
இலங்கை::யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எரிக் பெரேரா அத தெரணவிற்கு தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையின் காரணமாக அவ் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் அங்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.

தற்போது யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பதற்றநிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தான் அறிந்ததாகவும் ஆனால் அங்குள்ள மேலதிக நிலைமை குறித்து தகவல் பெற முடியாதுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார அத தெரணவிடம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வாயில் கதவை மூடி மாணவர்கள் இன்று  பகல் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிற்கும் மீது பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதால் பொலிஸார் மாணவர்கள் மீது தடையடி நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைக்குமா? : பெங்களூரில் நாளை மாலை ஜெயலலிதா ஷெட்டர் பேச்சு!

Wednesday, November 28, 2012
சென்னை::சுப்ரீம் கோர்ட் ஆலோசனைப்படி, காவிரி நதிநீர் பிரச்னை குறித்து தமிழக, கர்நாடக முதல்வர்கள் நாளை மாலை பெங்களூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனது. வடகிழக்கு பருவ மழையாவது கை கொடுக்கும் என காவிரி டெல்டா விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் நீரின்றி காணப்படுகிறது. மேட்டூர் அணையிலும் குறைந்த நீர்தான் இருப்பு உள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள் நீரின்றி அழியும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு தரவேண்டிய 52.8 டிஎம்சி நீரை உடனடியாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோக்கூர் நேற்று முன்தினம் விசாரித்தனர். ‘இரு மாநில முதல்வர்களும் காவிரி நீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்யுங்கள்’ என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையேற்று, கர்நாடக முதல்வரை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சுப்ரீம் கோர்ட் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதா 29ம் தேதி பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கர்நாடக சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழக முதல்வர் விருப்பப்படி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஷெட்டர் ஒப்புக்கொண்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பேச்சுவார்த்தை எப்போது என்பது புதன்கிழமை (இன்று) உறுதியாகும்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், இரு மாநில முதல்வர்களும் காவிரி நதி நீர் பிரச்னை குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கான இடம், நேரம் குறித்து இன்று மாலை 5 மணிக்கு உறுதி செய்து அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை மாலை 3 மணிக்கு பெங்களூரில் உள்ள ஐடிசி கார்டீனியா ஓட்டலில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீஸ் உயரதிகாரிகளுடன் பெங்களூர் போலீஸ் கமிஷனர் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஹாராச்சி பயணம் செய்த ஜீப் வண்டியில் இருந்து கஞ்சா மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன!

Wednesday, November 28, 2012
இலங்கை::ஹம்பாந்தோட்டை – ரன்ன- வாடிகல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஹாராச்சி பயணம் செய்த ஜீப் வண்டியில் இருந்து கஞ்சா மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஹாராச்சி பயணம் செய்த ஜீப் வண்டியில் இருந்து போர12 என்ற ஆயுதமும், ஒரு ரிவால்வர் மற்றும் துப்பாக்கி ரவைகள் ஆறுடன், 36.6 கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – ரன்ன- வாடிகல பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்த ஜீப் வண்டி, நேற்று அதிகாலை பேருந்து ஒன்றுடன் மோதுண்ட நிலையில், பாதையை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்து பாதசாரி ஒருவரை மோதியது.

இதில் அந்த பாதசாரி அந்த இடத்திலேயே பலியனதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என்றது அமெரிக்கா – விக்கிலீக்ஸ்!

Wednesday, November 28, 2012
இலங்கை::புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் சொத்து விபரங்கள் பற்றி தகவல் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினருக்கும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கை நிதிப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டி.கே. விஜேசூரிய மற்றும் சிரேஸ்ட துணைப் பணிப்பாளர் சிசிர ரணசிங்க ஆகியோருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது புலிகளின் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டார் என விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் உலக நாடுகளின் நிதிப் புலனாய்வுப் பிரிவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புலிகளின் சொத்து விபரங்களை பட்டியலிட்டு, அவற்றை முடக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவ பிரதிநிதிகள் இலங்கையில்!

Wednesday, November 28, 2012
இலங்கை::இலங்கை இந்திய மீனவர் அமைப்பின் சார்பாக தமிழக மீனவ உறுப்பினர்கள் சிலர் இன்று இலங்கை பிரமுகர்கள் சிலரை  சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக விபரித்துள்ளனர்.
இது தொடர்பாக எமது செய்திச் சேவை தமிழக மீனவ சங்கத்தின் ஆலோசகர் என் தேவதாஸை இணைத்துக் கொண்டு விபரங்களை பெற்றது..

இதனிடையே, இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் துணையுடன் வெளிக்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டார்

தமிழக இலங்கை கடற்பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்களே மீன்பிடிக்க கூடிய நிலை உள்ளது.

எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, 74 நாட்கள் வீதம் கடலில் மீன்பிடிக்க சென்றால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்கலாம் என்று யுவராஜா யோசனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர் அமைப்பின் சார்பாக தமிழக மீனவ உறுப்பினர்கள் சிலர் இன்றைய தினம் மீன்பிடித்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் இவர்கள் பொருளாதார அமைச்சர் பெசில் ராஜபக்ஸவை சந்தித்ததுடன், இலங்கை இந்திய மீனவர் கூட்டமைப்பு சார்பான கூட்டத்திலும் கலந்து கொண்டனர். 

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது!!

Wednesday, November 28, 2012
இலங்கை::இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இலங்கை நேரப்படி மாலை 3.45 மணியளவில் ஏவப்பட்டதாக இலங்கை பிரதிநிதி விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் திகதி குறித்த செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் 5 நாட்கள் தாமதமாகி நேற்று மாலை விண்ணுக்கு ஏவப்பட்டது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக் கோள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில், சொந்தமாக தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45 வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக, சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்!

Wednesday, November 28, 2012
ராமேசுவரம்::ராமேசுவரத்தை சேர்ந்த கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் மீனவர்கள் பிரசாத், எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து சென்றனர்.

பின்னர் அவர்கள் மீது போதை பொருட்கள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர். மீனவர்கள் 5 பேரும் கடந்த 28.11.2011 அன்று கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் வழக்கு விசாரணை 29 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டாக இலங்கை சிறையில் உள்ளனர்.

அவர்கள் மீது இலங்கை அரசு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடன் விடுதலை செய்யகோரி ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் 3,500 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 800 விசை படகுகள் கடற்கரை ஒரம் நிறுத்தப்பட்டுள்ளது.
1-11-12_findyour_INNER_468x60.gif

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: டிசம்பர் 11-ந்தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும்- தஞ்சை கோர்ட்டு உத்தரவு!

Wednesday, November 28, 2012
தஞ்சாவூர்::தமிழக முதல்- அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக, தஞ்சை கோர்ட்டில் வருகிற 11-ந்தேதி நேரில் ஆஜராக விஜயகாந்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தஞ்சையில் கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசையும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா வையும் அரசு அலுவலர்களையும் விஜயகாந்த் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் குப்புசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இது தொடர்பாக வருகிற டிசம்பர் 11-ந்தேதி விஜயகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
1-11-12_findyour_INNER_468x60.gif

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப மையம் கிளிநொச்சி பாதுகாப்புப் படையினரால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது!

Wednesday, November 28, 2012
இலங்கை::கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப மையம் கிளிநொச்சி பாதுகாப்புப் படையினரால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கொமேஷல் வங்கியுடன் இணைந்து இச் சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தகவல் கொழில்நுட்ப மையத்தில் 8 கணணிகள் உள்ளதுடன், இக் கணணிகள் அண்மையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோள்களுக்கமைவாக பிரதான அனுசரனையாளர்களான கொமேஷல் வங்கியால் இக் கணணிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கொமேஷல் வங்கியின் பிரதானி, சிரேஷ்ட வங்கி அதிகாரிகள், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி, சிரேஷ்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு கண் கிளினிக் மருத்துவ முகாம்

கந்தளாய் ஈச்சிலம்பத்து கஷ்ட பிரதேச வைத்தியாசாலையில் நடமாடும் கண் மருத்துவ கிளினிக் முகாமொன்று அண்மையில் 222ஆவது கந்தளாய் படைப்பிரிவினரால் நடாத்தப்பட்டது.
முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் கலந்துக்கொண்ட இம் மருத்துவ முகாமில் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்.டி.ஆர்.எதரிசிங்கவின் தலைமையில் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்துக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 30 நோயாளிகள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் இடம்மாற்றப்பட்டனர்.
இந் நலன்புரி சேவையானது 222 ஆவது படைப்பிரிவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் நலன்கருதி கழிவறை தொகுதி நிர்மாணம்

அலிகம்பி தமிழ் கலவன் பாடசாலையின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாக அக்கரைப்பத்து விசேட படைப்பிரிவு-3 தலைமையத்தால் புதிய கழிவறைத் தொகுதியொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப் பாடசாலையின் நீண்ட நாள் தேவையைக் கருத்திற்கொண்டு, படையினர் தாமாகவே முன்வந்து இச் நலன்புரி சேவையை மேற்கொண்டுள்ளனர். இதற்கு மொத்தமாக 130,000/= செலவு செய்யப்பட்டுள்ளது.
இதனை கையளிக்கும் நிகழ்வில் மதத்தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
வாசிப்பு முகாம்
கடந்த நவம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் உடுத்துரை மகா வித்தியாலயத்தில் 55ஆவது வெத்திலங்கேனி படைப்பிரிவினரால் இரண்டு நாட்களை கொண்ட வாசிப்பு முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருந்தங்கேனி பிரதேசம் உள்ளடங்களாக பல பாடசாலைகளைச் சேர்ந்த 125க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துக்கொண்டனர்.

சிறைச்சாலைகளில் புலனாய்வு உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Wednesday, November 28, 2012
இலங்கை::சிறைச்சாலைகளில் புலனாய்வு உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் ஒழுக்கத்தை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு புலனாய்வு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சி அளித்து, நாடு முழுவதிலும் உள்ள முக்கிய சிறைச்சாலைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெலிக்கடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்திருந்தனர். சிறைச்சாலைகளில் போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்கள்(10 ஆயிரம் கோடி ரூபா)!!

Wednesday, November 28, 2012
இலங்கை::புலிகளுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்கள்(10 ஆயிரம் கோடி ரூபா) என விடுதலைப்புலிகள் அமைப்பின், ஆயுத விநியோக வலையமைப்பின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன், இலங்கை அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் கே.பியிடம் நடத்திய விசாரணைகளின் போது,  அவர் இந்த சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். கனடா, சுவிசர்லாந்து, மலேசியா, பிரித்தானியா, நோர்வே,  பிரான்ஸ், சுவிடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் அதிகளவான சொத்துக்கள் கனடாவில் உள்ளன.

பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள்,  வாகன விற்பனை நிலையங்கள், லீசிங் நிறுனங்கள் என பல்வேறு வர்த்தக நிலையங்கள் இந்த சொத்துக்களில் அடங்குவதாக தெரியவந்துள்ளது.  இந்த வர்த்தக நிறுவனங்கள்  புலிகளின் செயற்பாட்டாளர்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 30 வீதமான சொத்துக்களின் பங்குகள் விடுதலைப்  ஆதரவான அமைப்புகளுக்கு கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Tuesday, November 27, 2012

விஷேட அதிரடிப்படையினர் தமது நேரத்தை மக்களின் சேம நலன்களுக்காகக் கழிக்கின்றனர் - உன்னிச்சை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஹெட்டிகே!

Tuesday, November 27, 2012
இலங்கை::உன்னிச்சை, ஆயித்தியமலை ஆகிய பகுதிகளில் பயங்கரவாத செயற்பாடுகள் எதுவும் இல்லாததால் இங்குள்ள விஷேட அதிரடிப்படையினர் தமது நேரத்தை மக்களின் சேம நலன்களுக்காகக் கழிக்கின்றனர் என உன்னிச்சை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஹெட்டிகே தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை உன்னிச்சை, ஆயித்தியமலைப் பிரதேச சிவில் பாதுகாப்பு மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் பேதே அவர் மேற்படி தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

பொலிசாருடனும் விஷேட அதிரடிப்படையினருடனும் பொதுமக்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதால்; இந்தப் பிரதேசங்களில் பயங்கரவாத செயற்பாடுகளும் ஏனைய குற்றச் செயல்களும் இடம்பெறுவதில்லை. பயங்கரவாத செயற்பாடுகள் எதுவுமில்லாததால் விஷேட அதிரடிப்படையினர் தமது நேரத்தை பொதுமக்களின் சேமநலன்களைக் கவனிப்பதிலும், சிரமதானப்பணிகளிலும், இடர் முகாமைத்துவ செயற்பாடுகளிலும் செலவழிக்கின்றனர். இது இப் பிரதேசத்தை நாமெல்லோரும் சேர்ந்து அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதுடன் மக்கள் அச்சமும் பீதியுமின்றி நிம்மதியாக வாழ்கின்றனரென அவர் மேலும் தெரிவித்தார்.

அச்சம் வேண்டாம் தீபங்கள் ஏற்றி விளக்கீட்டை கொண்டாடுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 27, 2012
இலங்கை::பொய்யான வதந்திகளைக் கேட்டு அச்சமடையாமல் மக்கள் தீபம் ஏற்றி கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

குமராலய தீபதினமான இன்றைய தினம் இந்துக்கள் அனைவரும் ஆலயங்களில் தீபங்களை ஏற்றி பக்திபூர்வமாக தமது வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் இயல்பான சமய வழிபாடுகளில் தாராளமாக ஈடுபட்டு விளக்கீட்டு திருநாளை கொண்டாடலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

Tuesday, November 27, 2012
இலங்கை::நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் முதல் இந்த விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
1956 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மொழிப் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினையால் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் இந்த தொலைபேசி இலக்கத்தின் உடாக அமைச்சிற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க நிறுவனங்களில் தங்களது தாய்மொழியில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்கள் இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வாழும் மக்கள் தங்களது தாய் மொழியில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக முதல்வருடன் 29ம் தேதி ஜெ. பேச்சு!

Tuesday, November 27, 2012
சென்னை::சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன், நாளை மறுதினம் (29ம் தேதி) தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, தமிழக டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை பற்றி முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் தமிழகத்தில் எந்த அணையும் நிரம்பவில்லை. காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை கர்நாடக அரசு தர மறுத்து வருவதால் மேட்டூர் அணையும் நிரம்பவில்லை.

அணையின் நீர்மட்டம் குறைந்து இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைத்து விட்டனர். இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை கர்நாடக அரசு  தர உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 23ம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 52.8 டிஎம்சி தண்ணீரை தரவேண்டிய கர்நாடக அரசு அதை தரவில்லை. சம்பா சாகுபடியை காக்க தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோக்கூர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன், தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இரு மாநில முதல்வர்களும் காவிரி நீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். விட்டு கொடுத்து தீர்வு காணும் வழியை தேடுங்கள். இரு மாநில முதல்வர்களும் சம்பிரதாயத்துக்காக, காபி உபசரிப்புக்காக மட்டும் சந்திக்காமல் இரு மாநில நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யுங்கள் என்று யோசனை தெரிவித்தனர்.

அதற்கு, கர்நாடக அரசு மூத்த வக்கீல் பாலி நாரிமன், ‘சந்திப்பு நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கர்நாடக முதல்வர் நிச்சயம் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார் என்றார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் சம்மதம் பெற்றபின் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்ற ஆலோசனையின்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா 29ம் தேதி பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி தமிழக சட்டசபை வைரவிழா நடக்கிறது. அன்றைய தினமே சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் 29ம் தேதி காலை முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் செல்வார் என்றும், காலை 11.30 மணிக்கு ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் மீண்டும் அன்றைய தினமே சென்னை திரும்புவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களூர் செல்லும் முதல்வருடன் காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர்கள், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட பலர் உடன் செல்கின்றனர். டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் இன்றி சம்பா வயல்கள் பாளம் பாளமாக வெடித்து பயிர்கள் கருகி வருகின்றன. இதை ஆதாரத்துடன் ஷெட்டரிடம் விளக்க அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது ஐ.நா பணியாளர்களை வெளியேற்றியது தவறு: ஹிட்டோக்கி டென்!

Tuesday, November 27, 2012
இலங்கை::யுத்தம் நடைபெற்ற காலத்தில் எமது பணியாளர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியது தவறு. அதற்காக தாம் வருந்துகிறோம். இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை விடமாட்டோம்' என்று ஐ.நாவின் தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான சிரேஸ்ட அரசியல் செயலாளர் ஹிட்டோக்கி டென் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் அரசியல் நிலமைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அறிவதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜ.நாவின் ஆசிய மற்றும் பசுபிக் அரசியல் விவகார குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யாமல் ஐ.நா தனது பணியாளர்களை வன்னியில் இருந்து வெளியேற்றியதற்கு ஆயர் தனது வருத்தத்தை இதன்போது தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ஹிட்டோக்கி டென், 'வன்னியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி ஏதோ ஒரு வகையில் தாங்கள் அறிவதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை விடமாட்டோம்' என்றும் கூறினார்.

அத்துடன், '2013ஆம் ஆண்டு இலங்கையில் நல்லிணக்கம் எற்பட்டு நிரந்தர சமாதானம் மற்றும் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் இதற்காக அனைவரும் முயற்சிகயை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, '2013ஆம் ஆண்டில், இலங்கை நல்லதொரு பொருளாதார நிலமைக்குத் திரும்பும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கப்பலில் துப்பாக்கி தோட்டாக்கள்; கெப்டன் கைது:-வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சீன பிரஜை!

Tuesday, November 27, 2012
இலங்கை::மொரீசியஸ் தீவிலிருந்து இலங்கையை நோக்கி செலுத்தப்பட்ட கப்பல் ஒன்றின் கெப்டன், கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கப்பலை கடற்படையினர் சோதனையிட்டபோது அதிலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சீன பிரஜை!

வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சீன பிரஜை ஒருவரை கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மீன்பிடிப் படகுடனையே இவர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரிஷியஸ் நாட்டுக்குச் சொந்தமான இந்தப் படகை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதிலிருந்து எம் - 16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களையும் அதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்

ராஜிவ் கொலை கைதிக்கு பரோல்!

Tuesday, November 27, 2012
மதுரை::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், ஆயுள் தண்டனை பெற்று, மதுரை சிறையில் இருந்த கைதி ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். சொத்து பிரச்னைக்காக, ரவிச்சந்திரனை, பரோவில் விடுவிக்க, ஐகோர்ட் கிளையில் அவரது தாயார் ராஜேஸ்வரி மனு செய்திருந்தார். அதை ஏற்று, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது; அதன் நிர்வாகிகளிடம் பேசக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன், நவ.,26 முதல் டிச., 10 வரை ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அவர் சிறையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலங்கை அருகே கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!

Tuesday, November 27, 2012
சென்னை::சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட தகவல் வருமாறு:-
வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலமான கடல் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 மணி முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்று கன்னியாகுமரி பகுதியில் சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. சின்னமுட்டம் துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. காலை 7 மணி முதலே அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
சூறாவளி மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதையடுத்து சுற்றுலாபயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 
1-11-12_findyour_INNER_468x60.gif

புலிகளின் மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்!

Tuesday, November 27, 2012
இலங்கை::புலிகளின் மாவீரர் தினத்திற்கான துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

அந்த துண்டுப்பிரசுரங்களை அக்கரைப்பற்று பிரதேசத்தில விநியோகிப்பதற்காக முச்சக்கரவண்டியில் எடுத்துச்சென்றதாகக் கூறப்படும் ஐந்து பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துண்டுப்பிரசுரங்களையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் இந்த 5 சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்தாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு!

Tuesday, November 27, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள குற்றத்தடுப்புப் பிரிவு முதலாம் மாடிக்கு சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளை எதிர்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போது உரிய இடத்திற்கு சென்றுள்ளார்.

இதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ப.திகாம்பரத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்து அவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் உள்ள நபரொருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் திகாம்பரத்திற்கு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது.

வர்த்தகரான பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் முன்னர் தற்போதைய மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாருடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது நிதி விடயங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் தங்களிடம் இருந்து 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாகவும் வங்கி விசாரணைகளில் இது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தனது மோசடியை ஒப்புக் கொண்டு அதனை திருப்பிச் செலுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் அத அதரணவிடம் தெரிவித்தார்.

எனினும் பணமோசடி செய்த குறித்த நபர் வீட்டை பிடுங்க முயற்சிப்பதாக தன்மீது தற்போது முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது குறித்து தனக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விசாரணை அழைப்பை ஏற்று அதனை எதிர்கொண்டதாகவும் குறித்த நபருக்கு 5 கோடி ரூபா பணம் வந்தது எப்படி என விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியதாகவும் திகாம்பரம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பெயரைக்கூறி அதிகார மோசடியில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்!

Tuesday, November 27, 2012
இலங்கை::புலிகளுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புலிகளுக்கு ஆதவரான கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சுவரொட்டிகள் மற்றும் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரச்சாரம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அனுப்பி வைக்க்பபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தில் சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை!

Tuesday, November 27, 2012
இலங்கை::பாரதூரமான செயல்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைப்பதற்காக மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சிறைச்சாலையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துடன் வவுணதீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.வித்தானகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொறியியலாளர்கள் வவுணதீவு பிரதேசத்தில் முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.