
இந்திய மற்றும் இலங்கை போதைப்பொருள் வியாபாரிகள் சிலர் வடபகுதி நெடுந்தீவுப் கடற்பிரதேசத்தில்,கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 1.5 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைதானவர்களில் ஐந்து பேர் இந்திய மீனவர்கள் ,மூவர் இலங்கை மீனவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களான இந்திய நாட்டவர்கள் ஐவரும் ட்ரோலர் படகுமூலம் நேற்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை இலங்கை கடல் எல்லைக்குள் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் இலங்கை சந்தேகநபர்களிடம் போதைப்பொருளை ஒப்படைக்க முயற்சித்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment