
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என இரண்டு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு நாடோ அல்லது அரசாங்கமோ தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். எம்.மனோகரன் மற்றும் எஸ். ராமகிருஸ்ணன் ஆகிய மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே அந்நாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இனப்பிரச்சினையால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமன்றி யுத்த வலயத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment