
அனுராதபுரம் சிறைச்சாலையில், அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் குறித்து, உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ. டப்ளியூ. கொடிப்பிலி நேற்று (28) அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை சிறையதிகாரிகள் கட்டி வைத்து தாக்குவது போன்ற காட்சிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேக நபர்களான இந்த அரசியல் கைதிகள், கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 19கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில், 4 தொலைபேசிகள் 3 ஜி தொழிற்நுட்பத்தை கொண்டவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் அதிகாரிகளின் தேடுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தம்மை சிறையதிகாரிகள் சித்தரவதைக்கு உட்படுத்துக்கின்றனர் என வெளிகாட்டும் வகையில், வீடியோ காட்சிகள் அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு அறிய கிடைத்துள்ளதாக சிறைச்சாரல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் செய்மதி தொழிற்நுட்பத்தின் ஊடாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, இந்த வீடியோ காட்சிகளை அனுப்பியுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த தொலைபேசிகளை கண்டுபிடிக்க விசேட தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment