
எதிர் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணிந்து வந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்க கழுத்துப் பட்டியினால் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டது. சபையில் விசேட அறிக்கையொன்றை முன்வைக்க ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க முயன்ற போது ஆளும் தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.
இது தொடர்பில்

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, தினேஷ் குணவர்தன ஆகியோரும் கருத்து தெரிவித்தனர். இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொதுநலவாய சங்க கழுத்துப்பட்டியை கழற்றியதால் அரசாங்கத்திற்கோ பாராளுமன்றத்துக்கோ அன்றி நாட்டு மக்களுக்கு செய்த அவமதிப்பு என அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment