





பெண்களை கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்க 80 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. மெரினாவில் மீண்டும் கடைகள்: தானே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் கடல்நீர் புகுந்தது. அங்கிருந்த கடைகள் சேதம் அடைந்தன. இந்நிலையில், புத்தாண்டு வியாபாரத்திற்காக இன்று காலை 7 மணிக்கே வந்து தங்களது கடைகளை வியாபாரிகள் சரி செய்தனர். குப்பைகளை அகற்றி கடற்கரையை சுத்தப்படுத்தி வருகின்றனர்.